பின்னோக்கி வந்த பள்ளி வாகனம் மோதி மாணவர் மரணம்

பின்னோக்கி வந்த பள்ளி வாகனம் மோதி மாணவர் மரணம்

1 mins read
f51faa64-b986-4052-a073-fd10a3521fe1
உயிரிழந்த மாணவர் தீக்சித். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: சென்னை ஆழ்­வார் திரு­ந­கர் பகு­தி­யில் உள்ள தனி­யார் பள்­ளி­யில் தீக்­சித் என்ற மாண­வர் இரண்­டாம் வகுப்பு படித்து வந்­தார்.

பள்­ளிக்கூடத்திற்கு நேற்­றுக் காலை வழக்­கம்­போல் வேனில் சென்ற இவர், வேனி­லி­ருந்து இறங்­கிச் சென்­ற­போது, தாம் மறந்து வைத்த பொருளை எடுப்­ப­தற்­காக மீண்­டும் வேன் அருகே வந்­துள்­ளார்.

மாண­வர் வந்­ததை அறி­யாத வேன் ஓட்­டு­நர் பூங்­கா

­வ­னம், வேனை பின்­பு­றம் இயக்­கி­ய­தில் மாண­வர் மீது வேன் மோதி­யது.

இதில் படு­கா­யமடைந்த மாணவர் தீக்­சித், மருத்­து­வ­மனைக்கு அழைத்­துச் செல்­லும் வழி­யி­லேயே உயி­ரி­ழந்­தார். வேன் ஓட்­டு­நர் பூங்­கா­

வ­னம், மாண­வர்­களை வேனி­லி­ருந்து இறக்­கி­வி­டும் ஊழி­யர் ஞான­சக்தி ஆகி­யோ­ரைக் கைது செய்த வள­ச­ர­வாக்­கம் காவல்­து­றை­யி­னர், பள்­ளி­யின் தாளா­ளர் ஜெய­சு­பாஷ், பள்ளி முதல்­வர் தன­லட்­சுமி ஆகி யோர்மீது வழக்­குப்­ப­திவு செய்துள்­ள­னர்.

இச்சம்பவத்தையடுத்து, பள்ளிக்கூடத்திற்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.