தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பட்ஜெட் விவகாரம்: அண்ணாமலை, தியாகராஜன் மோதல்

1 mins read
64a4bdd0-9dae-40cb-9c07-6fefac3d86a4
பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன். படங்கள்: தமிழக ஊடகம் -
multi-img1 of 2

சென்னை: தமிழ்­நாடு அரசு தாக்­கல் செய்த வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்­கை­யைக் கண்­டித்து வள்­ளு­வர்­கோட்­டம் அருகே தமிழ்­நாடு மாநில பாஜக சார்­பில் ஆர்ப்­பாட்­டம் நடை­பெற்­றது.

இதில் பங்­கேற்­றுப் பேசிய பாஜக மாநி­லத் தலை­வர் அண்­ணா­மலை, "தமிழ்­நாட்­டுக்கு மத்­திய அரசு வழங்க வேண்­டிய ஜிஎஸ்டி நிலு­வைத்­தொகை ரூ.16,500 கோடி என நிதி­ய­மைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் மீண்­டும் மீண்­டும் சொல்லி வரு­கி­றார். ஆனால், இறுதி நிலு­வைத் தொகை­யை­யும் மத்­திய அரசு வழங்­கி­விட்­டது." என்­றார்.

அண்­ணாம­லை­யின் கருத்­துக்கு நிதி­ய­மைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் பதில் கூறி­யுள்­ளார். "பாஜக மாநி­லத் தலை­வர் அண்­ணா­மலை தமிழ்­நாடு பட்­ஜெட் ஆவ­ணங்­களை முழு­மை­யாக படிக்க வேண்­டும். தகு­தி­யற்ற நபர்­கள் பொது இடங்­களில் தெரி­விக்­கும் தவ­றான தக­வல்­க­ளுக்குப் பதி­ல­ளிப்­பது என் வேலை இல்லை.

"சட்­டப்­பே­ர­வை­யில் தாக்­கல் செய்­யப்­பட்ட பட்­ஜெட்­டில் ஏதே­னும் தவறு இருப்­ப­தாகக் கரு­தி­னால் அது அண்­ணா­ம­லை­யின் அறியாமை. நான் பொய் சொல்லி இருப்­ப­தாக நினைத்­தால் அவர் நீதி­மன்­றத்தை நாட­லாம்," என்றார் அவர்.