விவசாயத்தைக் காக்க தம்பதியர் மேற்கொண்ட கார் பயணம்

விவசாயத்தைக் காக்க தம்பதியர் மேற்கொண்ட கார் பயணம்

1 mins read
8be34f1c-1e36-4ece-a427-032888d12f8e
-

திருப்­பூர்: விவ­சா­யத்­தைக் காக்க வலி­யு­றுத்தி திருப்­பூ­ரைச் சேர்ந்த 31 வய­தான அசோக்­கும் அவ­ரது மனைவி பிர­பா­வும் (29 வயது) கார் பய­ணம் மேற்­கொண்­டுள்­ள­னர் (படம்). இந்த இளம் தம்­ப­தி­ய­ரின் நான்கு வயது மக­னும் இந்­தப் பய­ணத்­தில் இணைந்­துள்­ளார்.

தனி­யார் நிறு­வ­னத்­தில் மேலா­ள­ராகப் பணி­யாற்றி வந்த அசோக்­குக்கு பய­ணங்­கள் மேற்­கொள்­வ­தில் ஆர்­வம் அதி­கம். இதை­ய­டுத்து கும­ரி­யில் தொடங்கி காஷ்­மீர் வரை பய­ணம் மேற்­கொள்­ள­லாம் என தன் மனை­வியை கலந்­தா­லோ­சித்து முடி­வெடுத்­தார்.

அதன்­படி, தனது பணி­யில் இருந்து வில­கி­னார் அசோக். அதன்­மூ­லம் வந்த பணத்­தைக் கொண்டு கார் வாங்­கிய அவர், அதி­லேயே படுத்து உறங்கி, சமை­யல் செய்­வ­தற்கு ஏற்ற வகை­யில் சில மாற்­றங்­க­ளைச் செய்­துள்­ளார்.

"நூறு நாள்­களில் பய­ணத்தை முடிக்­கும் திட்­டத்­து­டன் ஜன­வரி மாதம் மூவ­ரும் திருப்­பூ­ரில் இருந்து பய­ணம் தொடங்­கி­னோம். 28 மாநி­லங்­களில் உள்ள முக்­கிய இடங்­க­ளைப் பார்த்­தோம். வழி முழு­வ­தும் விவ­சா­யம் குறித்து மக்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தி­னோம்," என்று அசோக் தெரி­வித்­துள்­ளார்.