'ஆபரேஷன் கஞ்சா வேட்டை' நீட்டிப்பு: டிஜிபி அதிரடி

'ஆபரேஷன் கஞ்சா வேட்டை' நீட்டிப்பு: டிஜிபி அதிரடி

2 mins read
1958ee21-8e64-4c93-9353-743fae5eaf44
-

'கஞ்சா விற்போரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும்'

சென்னை: தமி­ழ­கத்­தில் கஞ்சா, தடை செய்­யப்­பட்ட புகை­யி­லைப் பொருள்­களை விற்­பனை செய்­வோர் மீது குண்­டர் சட்­டம் பாயும் என காவல்­துறை தலை­வர் டிஜிபி சைலேந்­தி­ர­பாபு எச்­ச­ரித்­துள்­ளார்.

இது தொடர்­பாக காவல்­துறை­யி­ன­ருக்கு அனுப்பி உள்ள சுற்­ற­றிக்­கை­யில், மார்ச் 28 முதல் ஏப்­ரல் 27ஆம் தேதி வரை, 'ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0' என்ற பெய­ரில் கஞ்சா விற்­போர் மீதான கடும் நட­வ­டிக்­கை­கள் நீடிக்­கும் என அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

தமி­ழ­கத்­தில் கஞ்சா, குட்கா உள்­ளிட்ட தடை செய்­யப்­பட்ட புகை­யி­லைப் பொருள்­களை கள்ளச்­சந்­தை­யில் விற்­பனை செய்­வது அதி­க­ரித்து வரு­கிறது. அவ்­வப்­போது காவல்­து­றை­யி­னர் இவற்றை பறி­மு­தல் செய்­கின்­ற­னர். பலர் கைதா­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், மாநி­லம் முழு­வ­தும் ஒரே சம­யத்­தில் பெரிய அள­வில் நட­வ­டிக்கை மேற்­கொள்வ­தன் மூலம் கஞ்சா விற்­ப­னைச் சங்­கி­லியை உடைக்க காவல்­துறை முடிவு செய்­துள்­ளது.

இதை­ய­டுத்து 'ஆப­ரே­ஷன் கஞ்சா வேட்டை 2.0' என்ற நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது. டிஜிபி சைலேந்­தி­ர­பாபு இதில் தீவிர கவ­னம் செலுத்தி வரு­கி­றாரா்.

"கடந்த 2021 டிசம்­பர் முதல் 2022 ஜன­வரி வரை, கஞ்சா உள்­ளிட்ட போதைப்பொருள் விற்­ப­னைக்கு எதி­ராக தொடர் நட­வ­டிக்கை எடுக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது. இப்­போது அந்­ந­ட­வ­டிக்கை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

"பள்ளி, கல்­லுா­ரி­கள் அருகே, கஞ்சா, குட்கா உள்­ளிட்ட போதைப் பொருள் விற்­ப­னையை ஒழிக்க வேண்­டும். கடத்­தல், பதுக்­கல், விற்­பனை சங்­கி­லித் தொடரை உடைக்க வேண்­டும்," என டிஜிபி சைலேந்­தி­ர­பாபு அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளார்.

போதைப்பொருள் விற்­ப­வர்­களை குண்­டர் தடுப்புச் சட்­டத்­தில் கைது செய்ய வேண்­டும் என்­றும் ரயில்வே காவல்­து­றை­யி­னர் கண்­கா­ணிப்புப் பணியை தீவி­ரப்­ப­டுத்தி கஞ்சா, குட்கா உள்­ளிட்ட பொருள்­க­ளைக் கைப்­பற்ற வேண்­டும் என்­றும் டிஜி­பி­யின் சுற்­ற­றிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மேலும், போதைப்பொருள் விற்­ப­வர்­கள், பின்­ன­ணி­யில் இருப்­ப­வர்­க­ளைக் கண்­கா­ணிக்கும் பொறுப்பை காவல் நிலைய நுண்ண­றி­வுப் பிரி­வுத் தலை­மைக் காவ­ல­ரி­டம் ஒப்­ப­டைக்க வேண்டும் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், இந்தப் பணி­களை மாநிலச் சட்­டம், ஒழுங்கு கூடு­தல் டிஜிபி கண்­காணித்து, கட்­டுப்­பாட்டு அறைக்கு அறிக்கை அளிக்க வேண்­டும் என அறி­வு­றுத்தி உள்­ளார்.

சென்னை, ஆவடி, தாம்­ப­ரம் பகு­தி­க­ளுக்­கான காவல் ஆணை­யர்­கள், போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பணி­யில் நேர­டி­யாக கவ­னம் செலுத்தி அறிக்கை தர வேண்டும் என்று டிஜிபி சைலேந்­தி­ர­பாபு மேலும் தெரி­வித்­துள்­ளார்.