தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டம்: 323 இடங்களில் மறியல்; 37,000 பேர் கைது

1 mins read
1940e25a-f651-47dd-8670-c6513d2c3cf0
-

சென்னை: பல்­வேறு கோரிக்கை­களை வலி­யு­றுத்­தி­யும் மத்­திய அர­சுக்கு கண்­ட­னம் தெரி­வித்­தும் நேற்று முன்­தி­னம் தொழிற்­சங்­கங்­கள் நடத்­திய போராட்­டத்­தின் போது தமி­ழ­கத்­தில் 37,000 பேர் கைதா­கி­னர்.

மாநி­லம் முழு­வ­தும் 323 இடங்­களில் சாலை மறி­யல் போராட்­டம் நடை­பெற்­ற­தா­க­வும் கைதா­ன­வர்­கள் ஆங்­காங்கே திரு­மண மண்­ட­பங்­களில் தங்க வைக்­கப்­பட்டு மாலை­யில் விடு­விக்­கப்­பட்­ட­னர் என்­றும் காவல்­துறை தெரி­வித்­தது.

சென்­னை­யில் ஆறு இடங்­களில் மத்­திய அர­சைக் கண்­டித்து ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்­றன. அண்ணா ­சாலை, கிண்டி உள்­பட ஐந்து இடங்­களில் சாலை­ம­றி­யல் போராட்­டங்­கள் நடை­பெற்­றன என்றும் 200 பெண்­கள் உள்­பட 1,300 பேர் கைது செய்­யப்­பட்டு விடு­விக்­கப்­பட்­ட­னர் என ஊட­கத் தகவல் தெரி­விக்­கிறது.

இதற்­கி­டையே, தொழிற்­சங்­கங்­க­ளின் ஆர்ப்­பாட்­டம் நேற்று இரண்­டா­வது நாளாக நீடித்­தது. எனி­னும் 90% அர­சுப் பேருந்­து­கள் இயக்­கப்­பட்­ட­தால் பொது­மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­ப­ட­வில்லை.

இது­தொ­டர்­பாக போக்­கு­வரத்துத்­துறை வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், வேலை நிறுத்த போராட்­டத்­தை ஒட்டி 28ஆம் தேதி போதிய அளவு பேருந்­து­கள் இயக்­கப்­பட்­ட­தால் மக்கள் அவ­திக்கு ஆளா­ன­தா­கவும் 29ஆம் தேதி (நேற்று) 98% பேருந்­து­கள் இயக்­கப்­பட்­டன என்­றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.