சிறையில் கொசுக்கடி அறையில் அடைக்கப்பட்டேன்; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார்

சிறையில் கொசுக்கடி அறையில் அடைக்கப்பட்டேன்; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார்

3 mins read
4e903ec5-b2a7-4d8a-968c-e32d2f8aa5cf
-

சென்னை: முன்­னாள் அமைச்­ச­ரும் அ.தி.மு.க அமைப்­புச் செய­லா­ள­ரு­மான டி.ஜெயக்­கு­மார் தமி­ழ­கத்­தில் தன் மீது பொய் வழக்­குப் போடப்­ப­டு­வ­தா­கக் கூறி அதி­பர் ராம்­நாத் கோவிந்த், துணை அதி­பர் வெங்­கையா நாயுடு, பிர­த­மர் நரேந்­தி­ர­மோடி, உள்­துறை அமைச்­சர் அமித்ஷா, தமி­ழக ஆளு­நர் ஆர்.என்.ரவி, தேசிய மனித உரி­மை­கள் ஆணை­யத்­த­லை­வர், மாநில மனித உரி­மை­கள் ஆணை­யத் தலை­வர் ஆகி­யோ­ருக்கு கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

"தமிழ்­நாட்­டில் சென்­னை­யி­லும் மற்ற நகர, பேரூ­ராட்சி பகு­தி­க­ளி­லும் நகர உள்­ளாட்­சித்­தேர்­தல் நடை பெற்­றது. ராய­பு­ரத்­தில் உயி­ருக்கு ஆபத்து விளை­விக்­கும் ஆயு­தங்­களை ஏந்­தி­ய­படி குண்­டர்­கள் பொது அமை­திக்கு பங்­கம் விளை­விக்­கும் வகை­யில் செயல்­பட்­ட­னர். வாக்­குச்­சா­வ­டி­களை கைப்­பற்­றி­னார்­கள். கள்ள வாக்­குப் போட்­டார்­கள். அவர்­களில் ஒரு­வர் ஆர்.நரேஷ். இவர் தி.மு.க. தொண்­டர் ஆவார். அவர் சமூக விரோதி. ஏற்­கெ­னவே நடை­பெற்ற பல குற்­றங் களில் அவ­ருக்குத் தொடர்பு உண்டு. அவ­ருக்கு எதி­ராக பல வழக்­கு­கள் பல்­வேறு நீதி­மன்­றங்­களில் நிலு­வை­யில் உள்­ளன. காவல்­து­றை­யி­ன­ரைக்கூட அவர் தாக்­கி­யுள்­ளார். அ.தி.மு.க. தொண்­டர்­க­ளை­யும் தாக்கி உள்­ளார். குற்ற நட­வ­டிக்­கை­யின்­போது அவர் பிடிக்­கப்­பட்­டார். அவரை காவல்­து­றை­யி­டம் ஒப்­ப­டைத்­தோம். இதற் கிடையே ராய­பு­ரம் காவல் நிலை­யத்­தில் எனக்கு எதி­ரா­க­வும் எங்­கள் கட்­சித்­தொண்­டர்­க­ளுக்கு எதி­ரா­க­வும் ஆர்.நரேஷ் பொய்ப் புகார் கொடுத்­தார்.

இந்த பொய்ப் புகார்­க­ளின் அடிப் படை­யில் காவல்­துறை துணை ஆணையர் சுந்­த­ர­வ­த­னம் தலை­மை­யில் காவல் துறை­யி­னர் எனது வீட்­டிற்­குள் புகுந்­த­னர். நான் அப்­போது எனது மனைவி மற்­றும் பேரக் குழந்­தை­க­ளு­டன் இரவு உணவு சாப்­பிட தயா­ரா­கிக் கொண்டு இருந்­தேன். நீங்­கள் கைது செய்­யப்­பட்டு உள்­ளீர்­கள் என்று அதி­கா­ரி­கள் என்­னி­டம் தெரி­வித்­த­னர். உட­ன­டி­யாக வேனில் ஏறு­மாறு என்னை கட்­டா­யப்­ப­டுத்­தி­னார்­கள். எதற்­காக கைது செய்­யப்­பட்­டுள்­ளேன் என்ற விவ­ரத்தை என்­னி­டம் அவர்­கள் தெரி­விக்­க­வில்லை. உடையை மாற்­றிக்­கொள்­ள­வும் இர­வில் உட்­கொள்ள வேண்­டிய மாத்­தி­ரை­களை எடுத்­துக் கொள்­ள­வும் காவல்­துறை யினர் அனு­ம­திக்­க­வில்லை.

"வேனில் என்னை ஏற்­றி­னார்­கள். ஆனால் என்னை காவல் நிலை­யத்­திற்குக் கொண்டு செல்­ல­வில்லை. நள்­ளி­ரவு எழும்­பூ­ரில் உள்ள மெட்­ரோ­பா­லிட்­டன் நீதி­மன்ற வளா­கத்­திற்கு என்னை கொண்­டு­ சென்­ற­னர். அங்கு ஜார்ஜ்­ட­வுன் நீதி­மன்ற மெட்ரோ பாலிட்­டன் மாஜிஸ்­தி­ரேட் முன்பு என்னை முன்­னி­லைப்­ப­டுத்­தி­னர்.

அப்­போது, திமுக அர­சின் கட்­ட­ளைப்­படி காவல்­துறை என்­னி­டம் காட்டுமிராண்­டித்­த­ன­மாக நடக்­கிறது என்று மாஜிஸ்­தி­ரேட்­டி­டம் தெரி­வித்­தேன். இது மனித உரிமை மீறல் என்­ப­தை­யும் உச்­ச ­நீ­தி­மன்ற வழி­மு­றை­க­ளுக்கு புறம்­பா­னது என்­ப­தை­யும் எடுத்­து­ரைத்­தேன்.

மாஜிஸ்­தி­ரேட், எனக்­குச் சிறை­யில் முதல் வகுப்பு வசதி செய்து கொடுக்க வேண்­டும் என்று உத்­தர விட்­டி­ருந்­தார். ஆனால் என்னை பூந்­த­மல்லி கிளைச்­சி­றைக்கு கொண்டு சென்­ற­னர். அங்கு அர­சி­யல் கைதி­க­ளுக்­கான முதல் வகுப்பு வச­தி­யில்லை. உண­வும் தர­வில்லை. உடல்­ந­லப் பிரச்­சி­னை­களை தணிப்­ப­தற்­கான மருந்து மாத்­தி­ரை­களும் தரப்­ப­ட­வில்லை. அசுத்­த­மான அறை­யில் கொசுக்­ க­டி­க­ளுக்­கி­டையே நான் அவ­திப்­பட்­டேன். எனவே அரசு எந்­தி­ரத்தை துஷ்­பி­ர­யோ­கம் செய்து வரும் திமுக அரசு மீது உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். காவல் துணை ஆணை­யர் சுந்­த­ர­வ­த­னம், ஆய்­வா­ளர் லட்­சு­ம­ணன், பூபா­லன், சங்­கர பாண்­டி­யன், ஆய்­வா­ளர் பணி­யாற்றி சம்­ப­வத்­திற்­குப் பிறகு காவல் உதவி ஆணை­ய­ராக பதவி உயர்வு பெற்ற ரவி ஆகி­யோர் மீது உடனே உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்," என்று அந்தக் கடி­தத்­தில் டி.ஜெயக்­கு­மார் தெரி­வித்­துள்­ளார்.