சென்னை: திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லுாரியில் பிவிஎஸ்சி பட்டப்படிப்பு படித்து பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்துள்ள சங்கர் என்ற மாணவர் 26 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், கால்நடை மருத்துவம் இளங்கலைப் படிப்பிற்கான பெரும்பாலான பாடங் களில் திருப்பூரைச் சேர்ந்த மாண வர் சங்கரே முதலிடம் பெற்றிருந்தார். அதனால், 26 பதக்கங்களை அவர் அடுத்தடுத்து பெற்று பார்வையாளர்களை வியப்புக் குள்ளாக்கினார்.
"எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைக்காததால் கால்நடை மருத் துவப் படிப்பைத் தேர்வு செய்து படித்தேன். பாடத்தில் முழு கவன மும் இருந்ததால் 26 பதக்கங்களை வென்றுள்ளேன். தற்போது கேரளாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் முதுகலை படிப்பை பயின்று வருகிறேன்," என்றார் சங்கர். இவரது தந்தை ராமசாமியும் தாயார் புஷ்பராணியும் திருப்பூர் பனியன் நிறுவனப் பணியாளர்களாவர்.

