மாநிலம் முழுவதும் இரண்டு நாள்களில் 350 பேர் கைது

மாநிலம் முழுவதும் இரண்டு நாள்களில் 350 பேர் கைது

1 mins read
0dc67bfe-1b31-4839-9ab1-e0cb04029368
-

சென்னை: தலை­ந­கர் சென்னை உள்­பட தமி­ழ­கம் முழு­வ­தும் கடந்த இரு நாள்­களில் கஞ்சா விற்­பனைக்கு எதி­ராக காவல்­து­றை­யினர் நடத்­திய சோதனையில் 350 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

தமி­ழ­கத்­தில் கஞ்சா, குட்கா உள்­ளிட்ட போதைப் பொருட்­க­ளின் விற்­ப­னையை ஒழிக்­கும் வகை­யில் 'ஆபரே­ஷன் கஞ்சா வேட்டை 2.0' என்ற பெய­ரில் ஏப்­ரல் 27ஆம் தேதி­வரை தொடர் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட வேண்­டும் என டி.ஜி.பி. சைலேந்­தி­ர­பாபு உத்­த­ர­விட்­டார்.

இதை­ய­டுத்து, இந்­தச் சோதனை நட­வ­டிக்­கை­கள் ஆங்­காங்கே முடுக்கிவிடப்­பட்­டுள்­ளன. கடந்த இரு நாள்­க­ளாக நடத்­தப்­பட்ட சோத­னை­யில் கஞ்சா வியா­பா­ரி­கள் 350 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.இவர்­க­ளி­டம் இருந்து 150 கிலோ கஞ்­சா­வும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. அதி­க­பட்­ச­மாக சென்­னை­யில் 50 பேரும் கோவை­யில் 32 பேரும் ஈரோட்­டில் 10 பேரும் கைதாகி உள்­ள­னர்.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு மாத கஞ்சா வேட்டையில், பலர் கைது செய்­யப்­பட்டு சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­னர். இதேேபால் இவ்வாண்டு தொடங்­கி­யுள்ள கஞ்சா வேட்­டைக்கு 'ஆபரே­ஷன் கஞ்சா வேட்டை 2.0 என்று பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.