பன்னூர் அல்லது பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம்

பன்னூர் அல்லது பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம்

1 mins read
a8e93ad7-7028-4fdf-9f82-f984a6ffa12c
-

சென்னை: மாநில அரசு பரிந் துரைத்­துள்ள நான்கு இடங்­களில் பன்­னூர் அல்­லது பரந்­தூ­ரில் சென்­னை­யின் இரண்­டா­வது விமான நிலை­யம் அமைய உள்ளதாகவும் அதற்கான பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வருவதாகவும் மத்­திய விமா­னப் போக்குவரத்­துத் துறை அமைச்­சர் ஜோதிர் ஆதித்யா மாத­வ­ராவ் சிந்­தியா கூறி­யுள்­ளார்.

போபால்-சென்­னைக்கு இடையே யான நேரடி விமா­னச் சேவையை தொடங்கிவைத்து விழா­வில் பேசிய அமைச்­சர், "சென்­னை­யில் இரண்டா வது விமான நிலை­யத்தை அமைப் பதற்­காக மாநில அர­சால் பரிந்து ரைக்­கப்­பட்ட நான்கு இடங்­களில் இரு இடங்­கள் தேர்வு செய்­யப்பட்­டுள்­ள­ன.

"இவற்றில் ஓரி­டத்தை இறுதி செய்­வ­தற்­காக மாநில அர­சுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­து. அந்த இடம் இறு­தி­யான பிறகு, இரண்டாவது விமான நிலை­யம் அமைக்­கும் பணியைத் துரிதமாகத் தொடங்கி, முடிக்­கப்­படும்," என்­று தெரி­வித்­தார். இந்த நிகழ்ச்­சி­யில் மத்­திய தக­வல் ஒளி­ப­ரப்­புத்­துறை இணை அமைச்­சர் எல் முரு­க­ன் உள்­ளிட்­டோரும் பங்கேற்றனர்.