ரூ.20,860 கோடியை விடுவிக்கக் கோரி மனு

ரூ.20,860 கோடியை விடுவிக்கக் கோரி மனு

2 mins read
867fcd0b-b45b-4cf8-8387-31dd8a95638c
சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிலுவைத் தொகையான 13,504.74 கோடி ரூபாய் உட்பட 20,860.40 கோடி ரூபாயை உடனே விடுவிக்கக் கோரி நிர்மலா சீதா ராமனிடம் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார். படம்: மாலை மலர் இணையம் -

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்த ஸ்டாலின்

புது­டெல்லி: டெல்­லி­யில் மத்­திய நிதி அமைச்­சர் நிர்­மலா சீதாராம­னைச் சந்­தித்த தமி­ழக முதல்­வர் மு.க. ஸ்டா­லின், தமி­ழ­கத்­திற்கு வழங்க வேண்­டிய ரூ.20,860 கோடி ஜிஎஸ்டி நிலு­வைத் தொகையை விடு­விக்க வேண்­டும் என்று கேட்டுக்கொண்­டார்.

இந்­தச் சந்­திப்­பின்­போது தமி­ழக நிதி­ய­மைச்­சர் பிடி­ஆர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜ­னும் உடன் இருந்­தார்.

ஜிஎஸ்டி நிலு­வைத் தொகை மற்­றும் அர­சாங்­கத் திட்­டங்­க­ளுக்­கான நிதி உட்­பட சுமார் 20,860 கோடி ரூபாயை தமி­ழ­கத்­துக்கு மத்­திய அரசு வழங்க வேண்­டி­யுள்­ளது.

திமுக அலு­வ­லக திறப்பு விழா உட்­பட பல்­வேறு நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­ப­தற்­காக முதல்­வர் மு.க. ஸ்டா­லின் நான்கு நாள் பயணமாக டெல்லி சென்­றுள்­ளார்.

சென்ற வியா­ழக் கிழமை அன்று பிர­த­மர் மோடி, உள்­துறை அமைச்சர் அமித்ஷா, பாது­காப்­புத்­துறை அமைச்சர் ராஜ்­நாத்­சிங் ஆகி­யோரை அவர் சந்­தித்­துப் பேசி­னார்.

பிர­த­மர் மோடி­யைச் சந்­தித்­த­போது 14 கோரிக்­கை­கள் அடங்கிய மனுவை அவ­ரி­டம் ஸ்டா­லின் வழங்­கி­னார்.

குடி­நீர் திட்­டம் என்ற பெய­ரில் காவிரி ஆற்­றின் குறுக்கே மேக­தாது அணை­யைக் கட்ட முயற்சி செய்யும் கர்­நா­டகாவுக்கு மத்­திய அரசு அனு­மதி வழங்­கக் கூடாது.

பாரம்­ப­ரி­ய­மாக மீன் பிடிக்­கும் பகு­தி­க­ளுக்­குச் சென்று மீன்­பி­டிக்­கும் தமி­ழக மீன­வர்­களை, அனைத்துலக கடல் எல்­லையை தாண்­டி­ய­தா­கக் கூறி இலங்கை கடற்­ப­டை­யி­னர் கைது செய்­கின்­ற­னர். கடந்த 11 ஆண்­டு­களில் இலங்­கைக் கடற்­ப­டை­யி­னரால் 3,690 மீன­வர்­கள் கைது செய்­யப்­பட்டு, அவர்­களில் 3,644 பேர் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ள­னர். மீதம் 46 தமி­ழக மீன­வர்­கள் சமீ­பத்­தில் விடு­விக்­கப்­பட்­ட­னர். ஆனால் தமி­ழ­கத்­திற்கு அவர்­கள் கொண்டு வரப்­ப­ட­வில்லை.

கச்­சத் தீவை மீட்டு இந்­தி­யா­வி­டம் சேர்ப்­ப­தும், அங்­குள்ள பாரம்­ப­ரிய மீன்­பிடி உரி­மை­களை மீட்­டெ­டுப்­ப­தும்­தான் தமி­ழ­கத்­தின் குறிக்­கோ­ளாக உள்­ளது. எனவே கச்­சத்­தீ­வை­யும், மீன­வர்­க­ளின் உரி­மை­யை­யும் மீட்டு, இந்த மோச­மான பிரச்­சி­னைக்கு நிரந்­த­ரத் தீர்வை ஏற்­ப­டுத்­தித் தர வேண்­டும்.

தமி­ழ­கத்­தின் நிலக்­கரி பற்­றாக்­கு­றைக்கு தீர்வு காண வேண்­டும். இலங்­கை­யில் வசிக்­கும் ஈழத் தமிழர்­க­ளுக்கு சம உரி­மை­யி­யல் மற்­றும் அர­சி­யல் உரி­மை­களை உறுதி செய்­வ­தற்கு இலங்கை அரசை இந்­திய அரசு அறி­வு­றுத்த வேண்­டும் உள்­ளிட்ட கோரிக்­கை­களை ஸ்டா­லின் முன்வைத்­து உள்­ளார். 'தமி­ழ­கத்­தின் முக்­கிய கோரிக்­கை­கள் தொடர்­பாக பிர­த­மர் நரேந்­திர மோடி, மத்­திய அமைச்­சர்களு­டன் நடந்த சந்­திப்­பு­கள் மிகுந்த மன­நி­றைவு அளிப்­ப­தாக ஸ்டா­லின் குறிப்­பிட்டு உள்­ளார்.

இதற்­கி­டையே நேற்று டெல்லி மேற்கு வினோத் நக­ரில் உள்ள ராஜ்­கியா சர்­வோ­தயா பால்­வித்­யா­லயா பள்ளிக்­கூ­டத்தை பார்­வை­யிட வந்த மு.க ஸ்டாலினை, டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால், வர­வேற்று பள்­ளி செயல்­பா­டு­களை விளக்­கி­னார்.