16ஆம் நூற்றாண்டின் நடுகல் கண்டுபிடிப்பு

16ஆம் நூற்றாண்டின் நடுகல் கண்டுபிடிப்பு

2 mins read
0944c0bc-0cbb-40e6-9a5b-0b148be81dc8
குதிரை வீரன் உருவம் பொறிக்கப்பட்ட நடுகல்.படம்: தமிழக ஊடகம் -

மதுரை: திண்­டுக்­கல் மாவட்­டம் குஜி­லி­யம்­பாறை அருகே 16ஆம் நூற்­றாண்­டைச் சேர்ந்த குதிரை வீரன் நடு­கல் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு உள்­ளது.

குஜி­லி­யம்­பாறை அருகே ராம­கிரி பிரிவு - அம்­மா­பட்டி ரோட்­டில் உள்ள குளக்­க­ரை­யில் இந்த நடு­கல் கிடைத்­தது.

திண்­டுக்­கல் வர­லாற்று ஆய்­வுக் குழு ஆய்­வா­ளர் விஸ்வ நாத­தாஸ், தளிர் சந்­தி­ர­சே­கர், மாண­வர் முர­ளி­தர், ஆசி­ரி­யர்­கள் சிவ­சங்­கர், ஜெக­தீ­சன் கூறி­ய­தா­வது:

"பாய்ந்த நிலை­யி­லுள்ள குதி­ரை­யில் வீரன் ஒரு­வன் கம்­பீ­ர­மாக அமர்ந்து தூக்­கிய நிலை­யி­லும் இடது கை குதி­ரை­யின் கடி­வா­ளத்­தைப் பிடித்த நிலை­யி­லும் உள்­ளது.

வீர­னின் இடை­வா­ரி­லி­ருந்து வேல் ஒன்று முன்­னோக்கி வீர­னின் இடது தோளை­யொட்டி குதி­ரை­யின் தலைக்கு மேல் நீட்­டி­ய­படி உள்­ளது.

"வீரன் தலை­யில் கரண்ட மகு­டம் சூடி, காதில் வளை­யம் தொங்­கி­ய­படி, இடை­யில் குறு­வாள் சொரு­கி­ய­படி இருக்­கி­றான்.

தோளுக்கு மேல் வட்­ட­மாக சூரி­யன் உள்­ளது.

"மதுரை நாயக்­கர் முதல் அர­சர் விஸ்­வ­நாத நாயக்­கர் ஆட்­சி­யில் பாளை­யப்­பட்டு பிரிக்­கப்­பட்டு கடவூர்பா­ளை­யம் உரு­வாக்­கப்­பட்­டது.

1625ல் கட­வூர்­பா­ளை­யத்­தில் இருந்து ராம­கி­ரியை தலை­மை­யி­ட­மாகக் கொண்டு ஒரு பாளை­யம் பிரிக்­கப்­பட்­டது.

இந்த ராம­கிரி பாளை­யத்­தின் எல்லை பூச­லில் போர் நடந்­தது. அப்போது இந்த நடு­கல் நடப்­பட்­டுள்­ளது.

"வாளை தூக்­கிய நிலை வீர­ம­ர­ண ­கதை, குதிரை பாய்ந்த நிலை போர்க் களத்­தை­யும், சூரி­யன் இருப்­பது உச்­சிப்­பொ­ழு­தை­யும் உக்­கி­ர ­மான சண்டை நடந்­த­தை­யும் குறிக்­கும்.

"தற்­ச­ம­யம் இப்­ப­குதி மக்­கள், காவல் தெய்­வ­மாக இந்த நடு­கல்லை வணங்­கு­கின்­ற­னர்.

"இந்த குதிரை வீரன் நடு­கல்­லில் இருந்து 600 அடி தூரத்­தில் பெண் ஒரு­வ­ருக்கு கொடை­யாக கிணறு கொடுக்­கப்­பட்ட கல்­வெட்டு உள்­ளது.

இக்­கல்­வெட்டு 1814ஆம் ஆண்டைச் சேர்ந்­தது. பசு நீர் குடிக்­கும் தொட்டி பொம்மி நாயக்­கர் என்­ப­வர் கொடை­யாக கொடுத்தது என்ற விவ­ரம் கல்வெட்டில் பொறிக்­கப்­பட்­டுள்­ளது," என்று தெரிவித்த னர்.