விமான நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்க கோரிக்கை

2 mins read
d8f54148-bd0b-4f8b-be92-98e7fcd23473
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: சென்னை உள்­நாட்டு விமான நிலை­யத்­திற்கு மீண்­டும் காம­ரா­ஜர் பெயரை வைக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி வெள்­ளிக்­கி­ழமை அன்று விமான நிலைய இயக்­கு­நர் அலு­வ­ல­கத்தை முற்­று­கை­யிட்டு நாடார் சமூ­கத்­தி­னர் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னர்.

்சென்னை விமான நிலை­யத்­தின் உள்­நாட்டு முனை­யத்­திற்கு காம­ரா­ஜர் என்ற பெய­ரும் அனைத்­து­லக முனை­யத்­திற்கு அண்ணா முனை­யம் என்­றும் பெயர் சூட்டப்­பட்டு இருந்­தது.

கடந்த 2008ஆம் ஆண்­டில் புதுப்­பிப்­புப் பணி­கள் நடை­பெற்­ற­போது பெயர்ப் பல­கை­கள் அகற்­றப்­பட்­டன.

அதன் பிறகு 2013ஆம் ஆண்­டில் இரு முனை­யங்­கள் திறக்­கப்­பட்­டா­லும் பெயர்ப் பல­கை­கள் மீண்­டும் வைக்கப்படவில்லை.

காம­ரா­ஜர் முனை­யம் என்ற பெயர் நீக்­கப்­பட்டு உள்­நாட்டு முனை­யம் என்­றும் அண்ணா முனை­யம் என்ற பெயர் நீக்­கப்­பட்டு அனைத்­து­லக முனை­யம் என்­றும் பொது­வா­கக் குறிப்­பி­டப்­ப­டு­கிறது.

இந்த நிலை­யில் உள்­நாட்டு முனை­யத்­திற்கு காம­ரா­ஜர் பெயரை மீண்­டும் சூட்­டக்­கோரி, தமிழ்­நாடு நாடார் சங்­கம், பெருந்­த­லை­வர் மக்­கள் கட்சி உட்­பட பல்­வேறு அமைப்­பி­னர், சென்னை விமான நிலைய இயக்­குநர் அலு­வ­ல­கத்தை முற்­று­கை­யிட்டு போராட்­டம் நடத்­தி­னர்.

சென்னை விமான நிலைய இயக்­கு­நர் சரத்­கு­மா­ரி­டம் அவர்­கள் தங்­க­ளு­டைய கோரிக்கை மனுவை அளித்­த­னர்.

பின்­னர் பேசிய தமிழ்­நாடு நாடார் சங்­கத் தலை­வர் முத்து ரமேஷ், பெருந்­த­லை­வர் மக்­கள் கட்­சித் தலை­வர் தன­பா­லன் ஆகி­யோர், "உள்­நாட்டு முனை­யத்­திற்கு மீண்­டும் காம­ரா­ஜர் பெயர் வைக்கக் ­கோரி, விமான நிலையை இயக்­கு­ ந­ரி­டம் மனு கொடுத்தோம். விரை­வில் நிறை­வேற்­றப்­படும் என்று அவர் உறுதி அளித்­துள்­ளார். இந்த விவ­கா­ரத்­தில் எந்த முடி­வும் எடுக்கப்படா­விட்­டால் மீண்­டும் போராட்­டத்­தில் இறங்­கு­வோம்," என்று கூறி­னர்.

தமி­ழக முதல்­வ­ரா­க­வும் காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வ­ரா­க­வும் இருந்த காம­ரா­ஜர் இந்­தியா முழு­வ­தும் செல்­வாக்­கு­மிக்க தலை­வ­ராக விளங்­கி­னார். லால் பக­தூர் சாஸ்­திரி, இந்­திரா காந்தி ஆகி­யோரை பிர­த­ம­ராக்­கிய பெருமை காம­ரா­ஜ­ருக்கு உண்டு. தமி­ழ­கத்­தில் ஏரா­ள­மான அர­சுப் பள்­ளி­கள் திறக்­கப் ­ப­டு­வ­தற்­குக் கார­ண­மாக இருந்த காம­ரா­ஜரை 'கல்­விக் கண் திறந்­த­வர்' என்று தந்தை பெரி­யார் மன­தா­ரப் பாராட்­டி­யி­ருந்­தார். தமக்­கென்று ஒரு சொத்­தை­யும் சேர்த்­துக் கொள்ள விரும்­பா­த­வர் காம­ரா­ஜர்.