மினி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து ஏழு பேர் பலி

மினி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து ஏழு பேர் பலி

1 mins read
61724c58-4f1a-4976-af19-35d26839d522
விபத்து நிகழ்ந்த இடத்தில் ஆங்காங்கே உடல்கள் கிடக்க கதறி அழும் குழந்தைகளை உறவினர்கள் சமாதானப் படுத்துகின்றனர். படம்: தமிழக ஊடகம் -

திருப்­பத்­துார்: திருப்­பத்­தூர் அருகே நிகழ்ந்த மோச­மான வாகன விபத்­தில் சம்­பவ இடத்­தி­லேயே ஏழு பேர் மாண்­ட­னர்.

மினி வேன் கட்டுப்­பாட்டை இழந்து பள்­ளத்­தில் இறங்கியதாகக் கூறப்­ப­டு­கிறது.

ஜவ்­வா­து ­ம­லை­யில் புங்­க­னுார் நாடு மலைக் கிரா­மத்­தைச் சேர்ந்த 30 பேர் கோயில் திரு­வி­ழா­விற்­காக நேற்று காலை 9:30 மணிக்கு அருகில் உள்ள நெல்­லி­வா­சன் நாடு என்ற கிரா­மத்­திற்கு மினி வேனில் சென்­றுள்­ள­னர்.

காலை 11:30 மணிக்கு புதுார்­நாடு என்ற இடத்­தில் சென்­ற­போது மினி வேன் பள்­ளத்­தில் கவிழ்ந்­தது.

இந்த விபத்­தில் ஏழு பேர் உயி­ரி­ழந்­த­னர்.

விபத்து நிகழ்ந்த இடத்­திற்கு விரைந்த திருப்­பத்­தூர் காவல் துறை­யி­ன­ரும் தீய­ணைப்புத் துறை­யி­ன­ரும் மீட்­புப் பணி­யில் உட­னடி யாக ஈடு­பட்­ட­னர்.

மலைப்­ப­குதி என்­ப­தால் மீட்­புப் பணி­யில் தொய்வு ஏற்­பட்­டது.

விபத்து நிகழ்ந்த இடத்­தில் உடல்­கள் சித­றிக் கிடந்­தன. சிலர் காயத்­தால் துடி­து­டித்­துக் கொண்டு இருந்­த­னர். குழந்­தை­கள் கதறி அழு­வதை காணொ­ளி­யில் காண முடிந்­தது. விபத்­துக்­கான கார­ணம் உட­னடியாகத் தெரி­ய­வில்லை. காவல்துறை­யி­னர் விசா­ரித்து வரு­கின்றனர்.