தஞ்சை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்தது

1 mins read
57f4c9d6-e7f2-4b6c-a249-2a3e2beeabc5
-

தஞ்சை: நர­சிங்­கம்­பேட்டை நாதஸ்­வ­ரத்­துக்கு இந்­திய அர­சாங்­கம் புவி­சார் குறி­யீடு வழங்­கி­யுள்­ளது.

சுமார் எட்டு ஆண்­டு­கால போராட்­டத்­திற்­குப் பிறகு இந்­தச் சிறப்பு கிடைத்­துள்­ள­தாக இசை ஆர்­வ­லர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

ஒரு குறிப்­பிட்ட புவி­சார்ந்த இடத்­தையோ அல்­லது தோற்­றத்­தையோ குறிக்­கும் பொரு­ளுக்­குப் புவி­சார் குறி­யீடு அங்­கீ­கா­ரம் அளிக்­கப்­ப­டு­கிறது. அந்­தப் பொரு­ளின் தரத்­துக்­கும் நன்­ம­திப்­புக்­கும் சான்­றாக இந்­தக் குறி­யீடு விளங்­கு­கிறது.

கடந்த 17ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்து பாரம்­ப­ரி­ய­மாக இசைக்­கப்­பட்டு வரு­கிறது தஞ்சை நர­சிங்­கம்­பேட்டை நாதஸ்­வ­ரம்.

ஆச்­சா­ம­ரம் எனும் மரத்­தி­லி­ருந்து இது பாரம்­ப­ரி­ய­மாக தயா­ரிக்­கப்­ப­டு­கிறது. நர­சிங்­கம்­பேட்­டை­யில் தற்­போது இரு­பது குடும்­பங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் மட்­டுமே இதைத் தயா­ரிக்­கின்­ற­னர்.

ஏற்­க­னவே தஞ்சை வீணை, தஞ்சை ஓவி­யம், தஞ்­சா­வூர் பொம்மை, திரு­பு­வ­னம் பட்­டுப் புடவை, நாச்­சி­யார்­கோ­வில் குத்­து­வி­ளக்கு உள்­ளிட்ட ஒன்­பது பொருள்­க­ளுக்­குப் புவி­சார் குறி­யீடு கிடைத்­துள்ள நிலை­யில், நாதஸ்­வ­ர­மும் இந்­தப் பட்­டி­ய­லில் சேர்க்­கப்­பட்­டுள்­ளது.