போதைக்கு அடிமையாக்கி பெண்களைச் சீரழித்தவன் கைது

2 mins read
669722ac-34e8-4017-ad68-42dac087e243
-

சென்னையில் பாலியல், போதைப்பொருள் கும்பல்களுக்கு காவல்துறை வலைவீச்சு

சென்னை: பெண்­க­ளைப் போதைப்­பொ­ருள்­க­ளுக்கு அடி­மை­யாக்கி சீர­ழித்­த­து­டன், அவர்­க­ளைப் பாலியல் தொழி­லி­லும் ஈடு­பட வைத்த ஆட­வன் கைதா­கி­ உள்ளான்.

பால­சுப்­பி­ர­ம­ணி­யன் என்ற அந்த ஆட­வ­ருக்கு சென்­னை­யில் போதைப்­பொ­ருள்­கள் விற்­கும் பல கும்­பல்­க­ளு­டன் தொடர்­புள்­ளது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்ளது.

தமி­ழ­கம் முழு­வ­தும் கஞ்சா விற்­பனை செய்­ப­வர்­கள் அதி­ர­டி­யா­கக் கைது செய்­யப்­பட்டு வரு­கின்­ற­னர்.

நூற்­றுக்­க­ணக்­கா­னோர் கைதாகும் நிலை­யில், சென்னையில் காவல்­துறை சுற்­றுக்­கா­வல், கண்கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களைத் தீவி­ரப்­ப­டுத்தி உள்­ளது.

மேலும் வாக­னச்­சோ­த­னை­யும் தீவி­ர­மாக நடை­பெற்று வரு­கிறது. கடந்த இரு வாரங்­களில் மட்­டும் வடசென்­னை­யில் போதை மருந்து விற்­கும் பத்­துக்­கும் மேற்­பட்­டோர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளி­டம் இருந்து ஐந்­தா­யி­ரம் போதை மாத்­தி­ரை­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

இந்­நி­லை­யில், சென்­னை­யில் உள்ள வண்­ணா­ரப்பேட்டை பகுதி­யில் காவல்­து­றை­யி­னர் வாக­னச் சோத­னை­யில் ஈடு­பட்­டி­ருந்­த­போது அவ்­வ­ழியே சென்ற காரை நிறுத்தி சோத­னை­யிட்­ட­னர்.

அதில் இளை­யர் ஒரு­வ­ரும் இரு பெண்­களும் போதை மயக்­கத்­தில் இருப்­பது தெரி­ய­வந்­தது.

அதிர்ச்சி அடைந்த காவல்­து­றை­யி­னர் காரில் சோத­னை­யிட்­ட­போது போதை மாத்­தி­ரை­களும் போதைப் பழக்­கம் உள்­ள­வர்­கள் பயன்படுத்­தும் சில பொருள்­களும் கிடைத்­தன.

விசா­ர­ணை­யில் அந்த இளை­யர் சென்னை, அண்­ணா­ந­கர் பகு­தி­யைச் சேர்ந்த பால­சுப்­பி­ர­ம­ணி­யன் என்­ப­தும் இரு பெண்­களும் தென்­காசி, சென்­னை­யைச் சேர்ந்­த­வர்­கள் என்­பதும் தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து அவ்­விரு பெண்­களும் மக­ளிர் பிரிவு அதி­கா­ரி­யால் மேலும் தீவி­ர­மாக விசா­ரிக்­கப்­பட்டு, பின்­னர் பெற்­றோ­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­னர்.

பால­சுப்­பி­ர­ம­ணி­யன் இளம் பெண்­க­ளைக் குறி­வைத்து அவர்­க­ளுக்கு இல­வ­ச­மா­கப் போதை மாத்­தி­ரை­களை விநி­யோ­கித்து, போதைக்கு அடி­மை­யாக்கி உள்­ளான்.

பின்­னர் ஒரு கட்­டத்­தில் மாத்­தி­ரை­கள் தரு­வதை அவன் நிறுத்­தி­ய­தும், தவிப்­புக்கு ஆளா­கும் பெண்­கள் அவ­னது பேச்­சுக்­குக் கட்­டுப்­பட்­டுள்­ள­னர்.

அதன் பிறகு அவர்­களை சீர­ழித்து, பாலி­யல் தொழி­லில் ஈடு­ப­டுத்தி உள்­ளான் பால­சுப்­பி­ர­ம­ணி­யன். இதன் மூலம் கிடைத்த பணத்­தில் அவன் உல்­லா­ச­மாக வாழ்ந்­துள்­ளான்.

இதை­ய­டுத்து அவன் மீது பாலி­யல் வன்­கொ­டுமை உள்­ளிட்ட இரு பிரி­வு­க­ளின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்து காவல்­துறை கைது செய்­துள்­ளது.

பால­சுப்­பி­ர­ம­ணி­ய­னுக்கு சென்னை­யில் போதை மாத்­திரை விற்­கும் பல்­வேறு கும்­ப­லு­டன் நெருங்­கிய தொடர்பு இருப்­பது தெரி­ய­ வந்­துள்­ளதை அடுத்து, அவன் அளித்த தக­வல்­களை வைத்து அவர்­க­ளுக்­கும் வலை­வீசப்­பட்­டுள்­ளது.

ஏரா­ள­மான பெண்­கள் பால­சுப்பி­ர­ம­ணி­யனி­டம் சிக்கி சீர­ழிந்து இருப்­பது காவல்­து­றை­யி­னரை அதிர்ச்சி அடைய வைத்­துள்­ளது.

அந்­தப் பெண்­க­ளைப் பற்றிய விவரங்­கள் சேக­ரிக்கப்பட்டு வருகின்­றன. மேலும் போதைப்­பொருள் கும்­பல்­களைக் கூண்­டோடு பிடிக்­க­வும் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.