சொத்து வரி உயர்வு: அதிமுக ஆர்ப்பாட்டம்

2 mins read
bb3f05c9-3174-4277-b066-49b67c010376
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினர். படம்: தமிழகத் தகவல் ஊடகம் -

ஓபிஎஸ்: மக்களைக் கண்ணீரில் மிதக்கவிடும் செயல்

சென்னை: தமி­ழ­கத்­தில் சொத்து வரியை உயர்த்தி இருப்­பது மக்­களைக் கண்­ணீ­ரில் மிதக்­க­வி­டும் செயல் என அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்­செல்­வம் தெரி­வித்­துள்­ளார்.

சொத்து வரி உயர்த்­தப்­பட்­டி­ருப்­ப­தைக் கண்­டித்து சென்­னை­யில் அதி­முக சார்­பில் நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­தில் கலந்­து­கொண்டு பேசிய அவர், தமி­ழ­கத்­தில் மக்­கள் விரோத ஆட்சி நடப்­ப­தாக விமர்­சித்­தார்.

சொத்து வரி உயர்­வைக் கண்­டித்து தமி­ழ­கம் முழு­வ­தும் அதி­முக சார்­பில் நேற்று மாநி­லம் தழு­விய அள­வில் பல்­வேறு இடங்­களில் ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்­றன.

சென்­னை­யில் நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­துக்கு பன்­னீர்­செல்­வ­மும், அதி­முக இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் எடப்­பாடி பழ­னி­சாமி திருச்­சி­யில் நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­துக்­கும் தலைமை ஏற்­ற­னர்.

தமி­ழ­கத்­தில் சொத்து வரி 25% முதல் 150% வரை உயர்த்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் இது ஏழை, எளிய, நடுத்­தர மக்­க­ளைக் கடு­மை­யா­கப் பாதிக்­கும் என்­றும் பன்­னீர்­செல்­வம் குறிப்­பிட்­டார்.

வாடகை வீட்­டில் வசிப்­ப­வர்­களும் இத­னால் அல்­லல்­பட நேரி­டும் என்று தெரி­வித்த அவர், திமுக பொய்­யான வாக்­கு­று­தி­களை அளித்து ஆட்­சிக்கு வந்­தி­ருப்­ப­தாக கூறி­னார்.

"பத்­தாண்டு கால ஜெய­ல­லி­தா­வின் ஆட்­சி­யில் மக்­களை வாட்டி வதைக்­காத, வரி இல்­லாத வரவு செலவு அறிக்கை, வரி இல்­லாத ஆட்­சி­தான் நடை­பெற்­றது.

"திமுக தேர்­த­லின்­போது அளித்த ஐநூ­றுக்­கும் மேற்­பட்ட வாக்­கு­று­தி­களில் இது­வரை எது­வும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை," என்­றார் பன்­னீர்­செல்­வம்.

ராம­நா­த­பு­ரம், வேலூர், திரு­வள்­ளூர், மதுரை உள்­ளிட்ட மாவட்­டங்­க­ளி­லும் அதி­முக சார்­பில் நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டங்­களில் ஏரா­ள­மா­னோர் பங்­கேற்­ற­னர்.

சொத்து வரி உயர்­வைக் கண்­டித்து தமி­ழ­கம் முழு­வ­தும் எதிர்­வ­ரும் 10ஆம் தேதி தொடங்கி பத்து நாள்­க­ளுக்கு தெரு­மு­னைக் கண்­ட­னக் கூட்­டங்­கள் நடை­பெ­றும் என அம­முக அறி­வித்­துள்­ளது.

தமி­ழ­கம் முழு­வ­தும் மாந­க­ராட்­சி­களில் சொத்து வரி உயர்வை கண்­டித்து வரும் 8ஆம் தேதி ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­படப் போவ­தாக தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை அறி­வித்­துள்­ளார்.

நேரு: மத்திய அரசுதான் காரணம்

சென்னை: தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்த திமுக அரசு விரும்பவில்லை என்றும் 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, வரியை உயர்த்தினால்தான் நிதி தருவோம் என்ற மத்திய அரசின் நிபந்தனையால்தான் வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

"உள்ளாட்சி அமைப்புகளின் சொத்து வரியை உயர்த்த வேண்டும். அதன்பேரில்தான் மத்திய அரசின் மானியங்கள் விடுவிக்கப்படும் என்று மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையில் கூறப்பட்டிருந்தது.

"சென்னை மாநகராட்சியில் வரி உயர்த்தி 24 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்கு பிறகு தற்போதுதான் உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சந்தை மதிப்பு, பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஆகிய காரணிகளை பரிசீலித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது," என்று அமைச்சர் கே.என். நேரு மேலும் தெரிவித்துள்ளார்.