தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'2030ம் ஆண்டுக்குள் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழும்'

1 mins read
e1d1d53d-1111-415a-b9d7-b7842989910b
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே துபாய்க்கு பயணம் மேற்கொண்டேன். அதற்குப் பலன் கிடைத்துள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலின் -

முதல்வர்: திண்டிவனம் தொழிற்சாலையில் 6,000 பேருக்கு வேலை கிடைக்கும்

சென்னை: எதிர்­வ­ரும் 2030ஆம் ஆண்­டுக்­குள் தமி­ழ­கம் இந்­தியா­வில் முன்­னோடி மாநி­ல­மா­கத் திக­ழும் என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் திண்­டிவனம் பகு­தி­யில் புதிய காலணி உற்­பத்தி தொழிற்­சா­லைக்கு அடிக்­கல் நாட்டி பேசிய அவர், பல்­வேறு நிறு­வனங்­கள் தொழில் தொடங்­கும் ஆர்­வத்­து­டன் தமி­ழ­கம் நோக்கி வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

அடிக்­கல் நாட்­டப்­பட்ட புதிய தொழிற்­சாலை மூலம் 6,000 பேருக்கு வேலை­வாய்ப்பு கிடைக்­கும் என்­றும் இந்த வாய்ப்பை திண்­டி­வ­னம் பகுதி மக்­கள் பயன்­ப­டுத்தி முன்­னேற வேண்­டும் என்­றும் அவர் வலி­யுறுத்­தி­னார்.

"ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்தத் திட்டத்தின் மூலம் 22 ஆயிரம் படித்த இளையர்களுக்கு வேலை கிடைக்கும்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.

திமுக ஆட்­சிப் பொறுப்­பேற்­றுக்­கொண்ட இந்­தப் பத்து மாத காலத்­தில் தமி­ழக அரசை ஏரா­ள­மான தொழில் நிறு­வ­னங்­கள் தொடர்பு கொண்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், அனைத்து துறை­களும் சம விகி­தத்­தில் வளர வேண்­டும் என்­பதே திமு­க­வின் நோக்­கம் என்­றார்.

"தமிழகத்தில் வெளிப்படையான அரசு நிர்வாகம் நடந்து வருகிறது. எனவே தென்மாவட்டங்களிலும் தொழில் தொடங்க நிறுவனங்கள் முன்வரவேண்டும்.

"திமுக ஆட்சியில் அனைத்து மாவட்டங்களும் தொழில்வளர்ச்சி பெற முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதுபோன்ற திட்டங்களால் 2030ஆம் ஆண்டுக்குள் தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலமாகத் திகழும் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.