சொத்து வரி: முதல்வர் விளக்கம்

1 mins read
23e629b1-06df-467a-96bc-604bb10cc9f7
-

சென்னை: உள்­ளாட்சி அமைப்­பு­களின் வளர்ச்­சிப் பணி­க­ளுக்­கா­கவே சொத்து வரி உயர்த்­தப்­பட்­டுள்­ளது என்­றும் அரசு அதனை மன­மு­வந்து செய்­ய­வில்லை என்­றும் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் சட்­ட­மன்­றத்­தில் தெரிவித்தார்.

"முன்பு உள்­ளாட்சி அமைப்­பு­க­ளுக்­குத் தேர்­தல் நடக்­க­வில்லை. அத­னால், மக்­க­ளுக்­கான வளர்ச்­சித் திட்­டங்­கள் எல்­லாம் தேக்க நிலை­யில் இருந்­தன. மாந­க­ராட்சி உள்­ளிட்ட உள்­ளாட்சி அமைப்­பு­கள் வரு­வாய்ப் பற்­றாக்­கு­றை­யால், மக்­க­ளின் அன்­றா­டத் தேவை­க­ளுக்­கான பணி­க­ளைக்­கூட நிறை­வேற்ற சிர­மப்­பட்­டன. ஆனால், இப்­போது உள்­ளாட்சி அமைப்­பு­க­ளுக்­குப் பிர­தி­நி­தி­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் ஆற்ற வேண்­டிய பணி­களுக்கு, திட்­டங்­க­ளுக்கு அர­சி­டம் இருந்து நிதியை எதிர்­பார்ப்­பார்­கள். இத­னால், குறைந்த, நடுத்தர வருமானப் பிரிவினரைப் பாதிக்­கா­த வகையில், வளர்ச்­சிப் பணி­க­ளுக்­காக சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது," என்று மன்­றத்­தில் நேற்று முன்­தி­னம் முதல்­வர் விளக்­க­ம­ளித்­தார்.