தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கை தமிழருக்கு உதவ முதல்வர் முயற்சி

1 mins read
e6c6e4db-433f-4357-8dd8-26ec2f7dc6b9
இலங்கை நெருக்கடி காரணமாக இதுவரை 20 அகதிகள் தமிழகம் வந்துள்ளனர். அவர்களில் அந்தோணி நிஷாந்த் பெர்னாண்டோ, மனைவி ரஞ்சிதா, மகள் ஜெனுரிதிகா, மகன் ஆகாஷ் ஆகிய இந்த நால்வரும் ஆகக்கடைசியாக வந்தவர்கள். படம்: ஊடகம் -

சென்னை: இலங்­கை­யில் பொரு­ளி­யல் நெருக்­கடி கார­ண­மாக பெரும் சிர­மத்­திற்கு உள்­ளாகி இருக்­கும் தமி­ழர்­க­ளுக்கு உதவிப் பொருள்­களை அனுப்ப அனு­ம­திக்­கும்­படி தொலை­பேசி மூலம் இந்திய வெளி­யு­றவு அமைச்­சரை தமி­ழக முதல்­வர் வியா­ழக்­கி­ழமை மீண்­டும் வலி­யு­றுத்திக் கேட்­டுக்­கொண்­டார்.

அரிசி, கோதுமை, மருந்து உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சியப் பொருள்­களைக் கப்­பல் மூலம் தூத்­துக்­குடியில் இருந்து இலங்­கை­யின் கிழக்கு, வடக்கு மாநி­லங்­க­ளுக்­கும் கொழும்பு, யாழ்ப்­பா­ணத்­திற்­கும் தோட்­டத் தமி­ழர்­க­ளுக்­கும் அனுப்ப தமி­ழக அரசு ஆயத்­த­மாக இரு­க் கிறது என்று வெளி­யு­றவு அமைச்சர் ஜெய்­சங்­க­ரி­டம் ஸ்டா­லின் தெரி­வித்­தார்.

கொழும்­பி­லும் யாழ்ப்­பா­ணத்­திலும் உள்ள இந்­திய தூத­ரக அலு­வ­ல­கங்­கள் மூலம் அந்­தப் பொருள்­களை விநி­யோ­கிக்க அனு­மதிக்­கு­மாறு முதல்­வர் ஸ்டா­லின் வேண்­டு­கோள் விடுத்­தார்.

இலங்கை கடற்­படை தமி­ழக மீனவர்­க­ளைத் தாக்கி வரு­கிறது. இந்­தச் சம்­ப­வம் திரும்­பத் திரும்ப நடக்­கிறது.

இது கவலை தரு­கிறது. இதைத் தடுத்­து­நி­றுத்த வேண்­டும் என்று அண்­மை­யில் பிர­த­மர் மோடி­யி­டம் தான் வேண்­டு­கோள் விடுத்­த­தா­கக் கூறிய ஸ்டா­லின், வெளி­யு­றவு அமைச்­ச­ரை­யும் இதன் தொடர்­பில் உத­வும்­படி கேட்­டுக்கொண்­டார்.

இலங்கை பிடித்துவைத்து இருக்கும் தமி­ழக மீன­வர்­க­ளின் பட­கு­களைப் பத்­தி­ர­மாக விடு­விக்க வேண்­டிய தேவை இருப்­ப­தை­யும் மத்­திய தலை­வர்­க­ளி­டம் முதல்­வர் ஸ்டாலின் வலி­யு­றுத்­தி­னார்.

இதன் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி கூறிய தாகவும் மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.