சேலத்தில் சசிகலா: கலக்கத்தில் பழனிசாமி

சேலத்தில் சசிகலா: கலக்கத்தில் பழனிசாமி

2 mins read
7b22f5a8-0924-4eea-85e7-bff612ba3f75
-

சேலம்: இன்று முதல் கொங்கு மண்­ட­லத்­தில் சசி­கலா (படம்) சுற்றுப்­ப­ய­ணம் மேற்­கொள்ள இருப்­பது அதி­முக இணை ஒருங்­கிணைப்­பா­ளர் எடப்­பாடி பழ­னி­சாமி தரப்­புக்கு கலக்­கத்தை ஏற்­ப­டுத்தி இருப்­ப­தாக தமி­ழக ஊட­கத் தகவல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யில், கொங்கு மண்­டலத்­தின் பல்­வேறு பகு­தி­களில் சசி­க­லாவை வர­வேற்று பல்­வேறு வாச­கங்­க­ளு­டன் கூடிய பெரிய சுவ­ரொட்­டி­கள் ஒட்­டப்­பட்­டுள்­ளன.

'தியா­கத்­தாயே, அதி­ச­யமே, பலர் வெளிச்­சத்­திற்கு வர கார­ண­மாக இருந்த தியா­கச்­சு­டரே, தலை­வியே' என்று சசி­க­லாவைப் புகழ்ந்­து­ரைக்கும் சுவ­ரொட்­டி­களில் அதி­முக நிர்­வா­கி­கள் சில­ரது பெயர்­களும் இடம்­பெற்­றுள்­ளன.

குறிப்­பாக கலை­வாணி என்­ப­வரின் பெய­ரில் ஏரா­ள­மான சுவ­ரொட்­டி­க­ளைக் காண முடி­கிறது.

சேலம், ஈரோடு, நாமக்­கல், திருப்­பூர், கோவை உள்­ளிட்ட மாவட்­டங்­களை உள்­ள­டக்­கிய கொங்கு மண்­ட­லம் முன்பு அதிமுக கோட்­டை­யா­கக் கரு­தப்­பட்­டது. எனி­னும், அண்­மை­யில் நடந்து முடிந்த நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லில் அதி­மு­க­வுக்கு கொங்கு மாவட்­டங்­களில் எதிர்­பார்த்த ஆதரவு கிடைக்­க­வில்லை.

இந்­நி­லை­யில், கொங்கு மண்­ட­லத்­தில் ஓர­ளவு செல்­வாக்கு பெற்­றுள்ள சசி­கலா, அங்கு அர­சி­யல் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொள்­வது அதி­முக தலை­மைக்கு, குறிப்­பாக பழ­னி­சாமி தரப்­புக்கு கலக்­கத்தை ஏற்­ப­டுத்தி உள்­ள­தாக சசி­கலா ஆத­ர­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

சசி­கலா இன்று சேலம் மாவட்­டத்­துக்கு வருகை தர இருப்­ப­தா­க­வும் அவ­ருக்கு முன்­னாள் எம்­எல்ஏ தனி­ய­ரசு தலை­மை­யில் வர­வேற்பு அளிக்­கப்­ப­டு­கிறது என்­றும் அவர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதன் மூலம் பழ­னி­சா­மியின் சொந்த மாவட்­டத்­தி­லேயே அவருக்கு எதி­ராக அதி­முக நிர்வா­கி­கள் அடங்­கிய அணியை உரு­வாக்க சசி­கலா முயற்சி செய்­வ­தாகக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், சசி­க­லா­வுக்கு வெளிப்­ப­டை­யாக ஆத­ரவு தெரி­விக்­கும் பட்­சத்­தில், சம்­பந்­தப்­பட்ட நிர்­வா­கி­களை உட­ன­­டி­யாக கட்சியில் இருந்து களை­யெடுக்க பழ­னி­சாமி தரப்பு தயா­ராகி வருகிறது.

இதற்­கி­டையே, அதி­முக பொதுக்­குழுக் கூட்­டம் செல்­லாது என்று அறி­விக்­கக் கோரி, சசி­கலா தொடுத்த வழக்கை நிரா­க­ரிக்­கக் கோரி, அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர் பன்­னீர்­செல்­வம், இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் பழ­னி­சாமி ஆகி­யோர் தாக்­கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று அறி­விக்­கப்­பட உள்­ளது.

முன்­னாள் முதல்­வர் ஜெய­லலிதா மறை­வுக்­குப் பின்­னர், அதிமுக பொதுச் செய­ல­ராக சசிகலா நிய­மிக்­கப்­பட்­டது செல்லாது என 2017ல் நடந்த கட்­சிப் பொதுக்­குழு­வில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது. இந்த பொதுக்­குழு கூட்­டம் செல்­லாது என அறி­விக்கக் கோரி, சென்னை மாவட்ட உரிமை­யி­யல் நீதி­மன்­றத்­தில், சசி­கலா வழக்கு தொடுத்­தார்.