தமிழகத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடக்கம்

தமிழகத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடக்கம்

1 mins read
82426ce0-0da7-4fc3-8458-9f54ecfa7e65
-

சென்னை: தமி­ழ­கம் முழு­வ­தும் 18 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு கொரோனா பூஸ்­டர் தடுப்­பூசி போடும் பணி நேற்று தொடங்­கி­யது.

எனி­னும் ஒரு சில தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் மட்­டுமே பூஸ்­டர் ஊசி போடப்­ப­டு­வ­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது. ஒரு பூஸ்­டர் தடுப்­பூ­சி­யின் விலை ரூ.225 ஆகும்.

பூஸ்­டர் தடுப்­பூசி செலுத்­திய விவ­ரம், கோவின் இணை­ய­த்தளத்­தில் கட்­டா­யம் பதிவு செய்­யப்­பட வேண்­டும் என்­றும் மத்­திய சுகா­தா­ரத் துறை அமைச்சு ஏற்­கெ­னவே வெளி­யிட்ட வழி­காட்­டு­தல்­களை தனி­யார் தடுப்­பூசி மையங்­கள் பின்­பற்ற வேண்­டும் என்­றும் மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

பூஸ்­டர் தடுப்­பூசி போடு­வ­தற்கு மருந்­தின் விலைக்கு மேலாக ரூ.150 வரை சேவைக் கட்­ட­ண­மாக வசூ­லித்­துக்கொள்­ள­லாம் என­வும் அர­சுத்­த­ரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே புதிய உரு­மா­றிய கொரோனா தொற்று தமி­ழ­கத்­தில் இன்­னும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என தமி­ழக மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார். எனவே இது­கு­றித்து பரவி வரும் தக­வல்­க­ளால் பொது­மக்­கள் பீதி அடை­ய­வேண்­டாம் என அவர் கேட்­டுக்கொண்­டுள்­ளார்.

இது தொடர்­பாக தவ­றான தக­வல்­கள் வெளி­யாகி வரு­வ­தா­க­வும் அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார். முன்­ன­தாக, மும்­பை­யில் தொற்று பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.