குருத்தோலை பவனி: கிறிஸ்துவர்கள் திரளாகப் பங்கேற்பு

குருத்தோலை பவனி: கிறிஸ்துவர்கள் திரளாகப் பங்கேற்பு

1 mins read
e5f03e3a-c961-40c7-beda-995730342e1e
-

நாகை: கிறிஸ்­து­வர்­க­ளின் தவக்­கா­லத்­தில் முக்­கிய நாளாக கரு­தப்­படும் குருத்­தோலை ஞாயிறை­யொட்டி நேற்று வேளாங்­கண்ணி உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­களில் குருத்­தோலை பவனி நடைபெற்றது. இதில் ஏரா­ள­மானோர் திர­ளா­கப் பங்­கேற்­ற­னர்.

இந்­தப் பவ­னி­யில் பங்­கேற்­ற­வர்­கள் தங்­கள் கைகளில் குருத்­தோ­லை­களை ஏந்தி ஓசன்னா பாடல்­க­ளைப் பாடி­னர். ஈஸ்­டர் பண்­டி­கைக்கு முந்­திய வாரம் குருத்­தோலை ஞாயி­றாகக் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கிறது.

இதற்­காக தமி­ழ­கம் முழு­வ­தும் உள்ள தேவா­ல­யங்­களில் ஏரா­ள­மா­னோர் நேற்று காலை திர­ளா­கக் கூடி­னர்.

வேளாங்­கண்­ணி­யில் இந்­தக் குருத்­தோலை பவனி முக்­கிய தெருக்­க­ளின் வழியே சென்­றது. இந்­நி­கழ்­வில் பங்­கேற்­ப­தற்­காக வெளி மாவட்­டங்­கள், மாநி­லங்­களில் இருந்­தும் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் வந்­தி­ருந்­த­னர்.

நாகை, தூத்­துக்­குடி, கன்­னி­யா­கு­மரி, திரு­நெல்­வேலி, சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்­டங்­களில் அதிக எண்­ணிக்­கை­யி­லான தேவா­ல­யங்­களில் குருத்­தோலை ஞாயிறு கடைப்­பி­டிக்­கப்­பட்­டது. ஏப்­ரல் 17ஆம் தேதி கிறிஸ்­துவர்­க­ளால் ஈஸ்­டர் பண்­டிகை கொண்­டா­டப்­படு­கிறது.