கீழடி அகழாய்வு: ஒரே குழியில் மூன்று பானைகள்

கீழடி அகழாய்வு: ஒரே குழியில் மூன்று பானைகள்

1 mins read
fd6a03ab-e143-4d44-bd18-a38521935cf9
அகரம் பகுதியில் ஒரே குழியில் கண்டெடுக்கப்பட்ட மூன்று பானைகள். படம்: தகவல் ஊடகம் -

சிவ­கங்கை: கீழடி அக­ழாய்­வின்­போது அக­ரம் பகு­தி­யில் ஒரே குழி­யில் இருந்து மூன்று பானை­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன.

தமி­ழ­கத் தொல்­லி­யல் துறை­யி­னர் சிவ­கங்கை மாவட்­டம் கீழ­டி­யில் முகா­மிட்டு தொடர் அக­ழாய்­வுப் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர். தற்­போது எட்­டாம்­கட்ட அக­ழாய்வு நடை­பெற்று வரு­கிறது.

இதில், அக­ரம் பகு­தி­யில் அண்­மை­யில் தோண்­டப்­பட்ட குழி­யில் இருந்து மூன்று பானை­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. கீழ­டி­யில் மூன்று குழி­கள், அக­ரம், கொந்­தகை ஆகிய தளங்­களில் தலா ஒரு குழி என மொத்­தம் ஐந்து குழி­கள் தோண்­டப்­பட்டு அக­ழாய்­வுப் பணி­கள் நடப்­ப­தாக தொல்­லி­யல் துறை தெரி­வித்­துள்­ளது.

கொந்­த­கை­யில் தோண்­டப்­பட்­டுள்ள குழி­யில் இருந்து இது­வரை 12 முது­மக்­கள் தாழி­கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன. இதற்­கி­டையே, கீழ­டி­யில் பானை ஓடு­கள், சதுர வடி­வி­லான செங்­கற்­கள் உட்­பட ஏரா­ள­மான பொருள்­கள் கிடைத்துள்ளன. அத­னால் இங்கு அக­ழாய்­வுப் பணி­கள் தீவி­ரம் அடைந்­துள்­ளன. மிக விரை­வில் இப்­பொ­ருள்­கள் அனைத்­தும் அருங்­காட்­சி­ய­கம் ஒன்று நிறு­வப்­பட்டு, பொது­மக்­க­ளின் பார்­வைக்கு வைக்­கப்­பட உள்­ளன.

இதற்­கி­டையே, விரு­து­ந­கர் மாவட்­டம், அருப்­புக்­கோட்­டை­யைச் சேர்ந்த கல்­லூரி மாண­வர்­களும் வர­லாற்­றுத்­துறை பேரா­சி­ரி­ய­ரும் மாவில்­பட்டி பகு­தி­யில் கள ஆய்வு மேற்­கொண்­ட­னர்.

அப்­போது எட்டு அடி உய­ரம், ஒன்­றரை அடி அக­லம் கொண்ட தூணில் நான்கு பக்­கங்­க­ளி­லும் ஐந்து அடுக்­கு­க­ளைக் கொண்ட சிறிய அள­வி­லான புடைப்­புச் சிற்­பங்­க­ளு­டன் கூடிய ஓர் அடுக்­கு­நிலை நடு­கல் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது. இந்த அடுக்­கு­நிலை நடு­கல்­லா­னது கி.பி. 15ஆம் நூற்­றாண்­டைச் சார்ந்த விஜ­ய­ந­கர பேர­ர­சின் கர்­நா­டக பாணி­யில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ள­தாக கள ஆய்­வில் ஈடு­பட்­ட­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.