தமிழைப் புறக்கணித்த அண்ணா பல்கலைக்கழகம்

தமிழைப் புறக்கணித்த அண்ணா பல்கலைக்கழகம்

1 mins read
675780ff-72d7-4b9e-ad4a-42fafb800bc5
-

சென்னை: பத்து ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு புதுப்­பிக்­கப்­பட்­டுள்ள அண்ணா பல்­க­லைக்­க­ழ­கத்­தின் இணை­யத் தளத்­தில் தமிழ் மொழி புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ள­தாக புகார் எழுந்­துள்­ளது.

அந்த இணை­யத் தளத்­தின் அனைத்து பகு­தி­க­ளி­லும் ஆங்­கி­லத்­தில் மட்­டுமே விவ­ரங்­கள் இடம்­பெற்­றுள்­ளன. இது அதிர்ச்சி அளிப்­ப­தாக மாண­வர்­கள் தெரி­வித்­த­னர்.

புதுப்­பிக்­கப்­பட்ட இணை­யத்­த­ளம் பல்­வேறு படங்­க­ளு­டன் வண்­ண­ம­ய­மா­கக் காட்சி அளிக்­கிறது. எனி­னும், முன்பு இருந்­த­தைப் போல் தெளி­வான வடி­வ­மைப்பு இல்லை என்­றும் மாற்றி அமைக்­கப்­பட்ட இணை­யத்­த­ளத்­தில் தக­வல்­க­ளைத் தேடு­வது கடி­ன­மாக உள்­ளது என்­றும் விமர்­ச­னம் எழுந்­துள்­ளது.

அனைத்­துக்­கும் மேலாக, பல்­கலை இணை­யத்­த­ளத்­தில் அனைத்து பக்­கங்­க­ளி­லும் ஆங்­கி­லம் மட்­டுமே இடம்­பெற்­றுள்­ளது. எந்த இடத்­தி­லும் தமிழ் மொழியைக் காண முடி­ய­வில்லை என்றும், இதை அறவே ஏற்க இயலாது என்றும் சமூக ஆர்வ­லர்­கள் சுட்­டிக்­காட்டி உள்­ள­னர்.

தமி­ழ­கத்­தின் பெரு­மையை உலக அரங்­கில் பறை­சாற்ற வேண்­டிய அண்ணா பல்­க­லைக்­க­ழ­கம், தமிழ் மொழி­யைப் புறக்­க­ணித்­தி­ருப்­பது வேத­னைக்­கு­ரி­யது என்று அவர்­கள் கூறு­கின்­ற­னர்.