மதுரை: திருமங்கலம் அருகே நேற்று முன்தினம் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுகளின் உரிமையாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
போட்டி தொடங்கியபோது, காளை உரிமையாளருக்கு வழங்கப்பட்ட அனுமதிச்சீட்டுகள் சரிபார்க்கப்பட்டன. அப்போது சிலரிடம் போலி அனுமதிச்சீட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனால் அந்த காளைகளை அனுமதிக்க இயலாது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
அப்போது சில காளை களை அவற்றின் உரிமையாளர்கள் அனுமதி இன்றி பின்புறம் வழியாக அவற்றை அவிழ்த்துவிட்டனர். அவை
பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்ததால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
அப்போது சிலர் பரிசு மேடையை நோக்கி கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் கூட்டத்தைக் கலைக்க போலிசார் தடியடி நடத்த வேண்டியிருந்தது.
இதனால் ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தப்பட்டது.

