சென்னை: தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எந்தக் காலத்திலும் ஏற்க இயலாது என அவர் கூறியுள்ளார்.
"தமிழ் மொழியின் பெருமையை பிரதமர் மோடியே பலமுறை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். எனவே, தமிழகத்தில் தமிழும் ஆங்கிலமும்தான் பயன்படுத்தப்படும். மும்மொழிக் கொள்கை தேவையில்லை," என்று ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

