தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி: ஏ.ஆர்.ரகுமான் திட்டவட்டம்

தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி: ஏ.ஆர்.ரகுமான் திட்டவட்டம்

1 mins read
f92eb225-ef00-43d6-a57e-691a199c1942
-

சென்னை: தமிழ்ப் படங்களை எங்கு பார்த்தாலும் நாம் பெருமை கொள்ள வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழ்தான் இந்தியாவிற்கு இணைப்பு மொழி என்று குறிப்பிட்டார்.

இந்தியாவில் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்திதான் இணைப்பு மொழியாகக் கருதப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்­நி­லை­யில், ஏ.ஆர். ரகு­மான் பொது­வெ­ளி­யில் தமது கருத்­தைப் பதிவு செய்­துள்­ளார்.

ஏழு ஆண்­டு­க­ளுக்கு முன்பு மலே­சியா சென்­றி­ருந்­த­போது சீனர் ஒரு­வர் தம்­மி­டம் பேசி­ய­தா­க­வும் அப்­போது, வட இந்­தி­யர்­கள் நிற­மாக இருப்­ப­தா­க­வும் அவர்­க­ளின் படங்­களை விரும்­பிப் பார்ப்­ப­தா­க­வும் அந்­தச் சீனர் தம்­மி­டம் கூறி­ய­தா­க­வும் ரகு­மான் குறிப்­பிட்­டார்.

அதைக் கேட்டு தாம் மிக­வும் பாதிக்­கப்­பட்­ட­தாக குறிப்­பிட்ட அவர், அந்­தச் சீனர் தென்­னிந்­திய மொழிப் படங்­க­ளைப் பார்த்­தாரா எனும் கேள்வி தமக்­குள் எழுந்­த­தாக தெரி­வித்­தார்.

"நம் தமிழ்ப் படங்­க­ளைப் போன்­று­தான் மலை­யா­ளப் படங்­களும் மற்ற மொழிப் படங்­களும் உள்­ளன. இந்­தி­யா­வில் எங்­கி­ருந்­தா­லும் அது இந்­தி­யா­தான். இதில் வட இந்­தியா, தென்­னிந்­தியா என்று எது­வும் இல்லை.

"தென்­னிந்­தி­யப் படங்­களில் கறுப்­பாக இருப்­ப­வர்­க­ளுக்கு சிறந்த, வலி­மை­யான கதா­பாத்­தி­ரங்­க­ளைக் கொடுங்­கள். நம் எல்­லோ­ருக்­கும் நம் நிறம்­தான் பிடிக்­கும்," என்று ரகு­மான் மேலும் தெரி­வித்­தார்.