'அமித்ஷாவின் பேச்சு அரசியல் சட்டத்துக்கு விரோதமானது'

1 mins read
22681407-8de2-455e-81a1-490814305ef3
கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்குப் பாத யாத்திரையை தொடங்கி வைத்தார் கே.எஸ்.அழகிரி. படம்: இணையம் -

கோயம்­புத்­தூர்: இந்தி மொழி பேசாத மாநி­லங்­கள் உட்­பட அனை­வ­ரும் இந்தி மொழி கற்க வேண்­டும் என்ற மத்­திய அமைச்­சர் அமித்ஷாவின் பேச்சு இந்­திய அர­சி­யல் சட்­டத்­துக்கு விரோ­த­மா­னது என காங்­கி­ரஸ் தமி­ழ­கத் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி சாட்­டி­யுள்­ளார்.

பெட்­ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்­புக்­குள் கொண்டு வர­வும் சமை­யல் எரி­வாயு உருளை விலை­யைக் குறைக்­க­வும் மத்­திய அரசை வலி­யு­றுத்தி, காங்­கி­ரஸ் கட்­சி­யின் மனித உரிமை துறை சார்­பில், கோயம்­புத்­தூ­ரில் இருந்து சென்­னைக்கு பாத­யாத்­திரை செல்­லும் நிகழ்­வைத் தொடங்கி வைத்து பேசிய அவர் இவ்­வாறு சொன்­னார்.

"இந்தி பேசாத மாநி­லங்­களும் இந்தி மொழி­யைப் பின்­பற்ற வேண்­டும் என்ற மத்­திய அமைச்­சர் அமித் ஷாவின் பேச்சு, இந்­திய அர­சி­யல் சட்­டத்­துக்கு விரோ­த­மா­னது.

"இந்­தி­யா­வில் மொழிப்­பி­ரச்­சினை வந்­த­போது, அப்­போ­தைய பிர­த­மர் ஜவ­ஹர்­லால் நேரு, இந்தி பேசாத மக்­கள் விரும்­பும் வரை ஆங்­கி­லம் ஆட்சி மொழி­யாக இருக்­கும் என்­றார்.

"அந்த உத்­த­ர­வா­தத்­தின் அடிப்­படை­யில்­தான் இன்று இந்­தி­யா­வில் மொழிப்­பி­ரச்­சினை இல்­லா­மல் இருக்­கிறது. ஆனால், பாகிஸ்­தா­னில் மொழிப்­பி­ரச்­சினை ஏற்­பட்டு தான் அது பிள­வு­பட்­டுள்­ளது. இந்­நிலை இந்­தி­யா­வுக்கு வரக்­கூ­டாது.

"தமி­ழக முதல்­வர் ஸ்டா­லின், மத்­திய அமைச்­சர் அமித் ஷாவுக்கு தெளி­வான எச்­ச­ரிக்­கையை கொடுத்­துள்­ளார்," என்­றார்.

இதற்­கி­டையே, இந்தி திணிப்பை தமி­ழக பாஜக ஒரு­போ­தும் அனு­மதிக்­காது என்று தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை தெரி­வித்துள்­ளார்.