இரு ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனை கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக மாறியுள்ளதாக அதன் தலைமை மருத்துவர் தேரனிராஜன் அறிவித்துள்ளார்.
திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பத்துக்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தொடர்புடைய தஞ்சாவூரைச் சேர்ந்த ரவுடி 'கட்ட' ராஜாவுக்கு கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
எந்த வகை கொரோனா தொற்று பரவினாலும் அதை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை போன்றவற்றில் மாணவர் நலன் கருதி அரசுக்குத் துணை நிற்போம் என்று கூறியுள்ாளர் அதிமுக கட்சி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.எஸ்.செங்கோட்டையன்.
எரிசக்தி, பருவநிலை குறியீட்டு தரவரிசைப் பட்டியலில் குஜராத் முதலிடத்திலும் தமிழகம் 9வது இடத்திலும் உள்ளன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் மன்னார்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

