கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பூலன் கோடு பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்த விழாவில் வித்தியாசமான முறையில் 2 கிலோ காய்கறி பிரியாணியை முதலில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு 2,000 ரூபாய் பரிசு என அறிவிக்கப்பட்டது. இதில் 14 ஆண்களும் ஒரு பெண்ணும் கலந்து கொண்டனர்.
விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 13 நிமிடத்தில் இரண்டு கிலோ வெஜிடபிள் பிரியாணியை சாப்பிட்ட வினு என்கின்ற இளைஞர் முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.
முதல் பரிசை தட்டிச் சென்ற வினு, ஏற்கெனவே பரோட்டா சாப்பிடும் போட்டியில் பங்கேற்று 43 பரோட்டாக்களை சாப்பிட்டு பரிசை தட்டிச் சென்றதாக பெருமையுடன் கூறினார்.

