நூறு ஊழியர்களுக்கு கார் பரிசளித்த நிறுவனம்

நூறு ஊழியர்களுக்கு கார் பரிசளித்த நிறுவனம்

1 mins read
3010b281-c7f3-4aa0-b51e-db8d3c6f8fa3
-

சென்னை: கார் பரி­ச­ளித்து தனது ஊழி­யர்­களை மகிழ்ச்­சி­யில் திக்­கு­முக்­காட வைத்­துள்­ளது சென்­னை­யில் செயல்­படும் தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னம்.

சென்­னை­யைத் தலை­மை­யி­ட­மாக கொண்டு இயங்­கி­வ­ரும் Ideas2IT என்ற தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னம், 2009ஆம் ஆண்டு முதல் செயல்­பட்டு வரு­கிறது.

நிறு­வ­னத்­தில் பத்­தாண்­டு­களுக்­கும் மேல் பணி­யாற்­றிய 100 ஊழி­யர்­களை ஊக்­கு­விக்­கும் வகை­யில் மாருதி காரை பரி­சாக அளித்­துள்­ளது அந்­நி­று­வ­னம்.

இது குறித்து பேசிய நிறு­வ­னத்­தின் தலை­வர் முரளி விவே­கா­னந்­தன், "இது நிறு­வ­னம் கொடுக்­கும் கார் அல்ல. தங்­கள் கடின உழைப்­பின் மூலம் ஊழி­யர்­கள் சம்­பா­தித்­தது.

"வரும் நாள்­களில் இது­போன்ற மேலும் பல திட்­டங்­களை நடை­முறைப்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்­ளோம்," என்­றார்.

தங்க நாணயம், ஐபோன், கார் போன்ற பரிசுகள் தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக ஊழியர்கள் கூறினர். ஓரிரு நாள்­க­ளுக்கு முன்­னர் மென்­பொ­ருள் நிறு­வ­னம் ஒன்று தனது மூத்த அதி­கா­ரி­கள் ஐவ­ருக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்­பு­மிக்க பிஎம்­ட­பிள்யூ காரைப் பரி­ச­ளித்­தது குறிப்­பி­டத்­தக்­கது.