'இந்தி மொழித் திணிப்பை தமிழக பாஜக அனுமதிக்காது'

2 mins read
a7b1d0aa-d587-4212-91e7-0ed87d018ecf
-

சென்னை: இந்தி மொழித் திணிப்பை பார­திய ஜனதா கட்­சி­யின் தமி­ழ­கப் பிரிவு ஒரு­போ­தும் அனு­ம­திக்­காது என்று அதன் தலை­வர் அண்­ணா­மலை (படம்) நேற்று தெரி­வித்­துள்­ளார்.

சென்னை தியா­க­ராய நக­ரில் உள்ள கட்­சி­யின் தலைமை அலு­வ­ல­க­மான கம­லா­ல­யத்­தில் அவர் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தார்.

"எந்­தக் கார­ணத்­திற்­கா­க­வும் இந்தி மொழி­யைத் திணிப்­பதை தமி­ழக பாஜக அனு­ம­திக்­காது, ஏற்­றுக்­கொள்­ளாது என்­பதை மிக தீர்க்­க­மாக சொல்­வது எங்­க­ளது கடமை," என்­றார் அவர்.

"உள்­துறை அமைச்­சர் அமித் ஷா, இணைப்பு மொழி­யாக ஆங்­கி­லம் இருந்து வரு­கிறது, இதற்கு பதி­லாக இந்தி இருக்க வேண்­டும் என்­று­தான் கூறி­னார். திரு அமித்­ஷாவோ, பிர­த­மர் நரேந்­திர மோடியோ இந்­தி­யைத் திணிப்­பதை விரும்­ப­வில்லை," என்­றார் திரு அண்­ணா­மலை.

"இசை­ய­மைப்­பா­ளர் ஏ.ஆர். ரஹ்­மான் இந்­தி­யா­வி­னு­டைய இணைப்பு மொழி­யா­கத் தமிழ் இருக்க வேண்­டும் என்று கூறி­யி­ருக்­கி­றா­ர். நிச்­ச­ய­மாக அதை வர­வேற்­கி­றோம். அதில் தவறு எது­வும் கிடை­யாது. ஆனால் தமிழை இணைப்பு மொழி­யாக்க, அந்த இடத்தை அடை­வ­தற்­கான முயற்­சியை நாம் எடுத்­தி­ருக்­கி­றோமா என்­ப­து­தான் கேள்வி.

"உண்­மை­யா­கவே தமிழ் இணைப்பு மொழி­யாக வர­வேண்­டும் என்­றால், தமி­ழக அரசு ஒவ்­வொரு மாநில முதல்­வ­ருக்­கும் கடி­தம் எழுதி, அந்­தந்த மாநி­லத்­தில் 10 பள்­ளி­களில் முழு­மை­யாக தமிழ்­வ­ழிக் கற்­றலை நடத்த வகை­செய்ய வேண்­டும்; அதற்­கான முழுச் செல­வை­யும் தமி­ழக அரசு ஏற்­றுக் கொள்­ளும் என்று தமி­ழக முதல்­வர் கடி­தம் அனுப்ப வேண்­டும் என்­பது எங்­க­ளு­டைய கோரிக்கை.

தேசி­யக் கல்­விக் கொள்­கை­யில் ஐந்­தாம் வகுப்பு வரை தாய்­மொ­ழி­யில் படிக்­க­வேண்­டும் என உத்­த­ர­விட்­டதே பாஜக அர­சு­தான் என்று அண்­ணா­மலை நினை­வூட்­டி­னார்.