மருத்துவக் கழிவுகளைக் கொட்ட வந்த ஆட்டோ சிறைபிடிப்பு

மருத்துவக் கழிவுகளைக் கொட்ட வந்த ஆட்டோ சிறைபிடிப்பு

1 mins read
a5b8bd3c-ca40-4253-903f-53f484296068
-

பொள்­ளாச்சி: பொள்­ளாச்­சிக்­கும் கோயம்­புத்­தூ­ருக்­கும் இடை­யி­லான சாலை­யில் தனி­யார் மண்­ட­பம் ஒன்­றின் எதி­ரில் ஆட்டோ ஒன்று சந்­தே­கத்­துக்கு இட­மான வகை­யில் நின்று கொண்­டி­ருந்­தது.

இத­னால் சந்­தே­கம் அடைந்த அந்­தப் பகுதி மக்­கள் ஆட்டோ அருகே சென்று பார்த்­த­போது அதில் மூட்டை மூட்­டை­யாக மருத்­து­வக் கழி­வு­கள் காணப்­பட்­டன.

அதிர்ச்­சி­ய­டைந்த பொது­மக்­கள் ஆட்­டோ­வைச் சிறை­பி­டித்­த­னர்.

தக­வல் அறிந்து அந்த வட்­டா­ரக் காவல்­து­றை­யி­னர் மேற்­கொண்ட விசா­ர­ணை­யில் அரு­கில் இருந்த ஒரு வீட்­டி­லி­ருந்து இந்த மருத்­து­வக் கழி­வு­கள் கொண்­டு­வ­ரப்­பட்­டது தெரி­ய­வந்­தது.

சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள் மேற்­கொண்ட ஆய்­வில் காலா­வ­தி­யான மாத்­திரை, ஊட்ட மருந்து போன்­றவை அதில் இருந்­தது கண்­ட­றி­யப்­பட்­டது.