சென்னை: தமிழகத்தில் இனி அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14, சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அம்பேத்கர் வேண்டாததை நீக்கிய சிற்பி என்பதுடன் வேண்டியதைச் சேர்த்த ஓவியர் என்று முதல்வர் ஸ்டாலின் தமது உரையில் குறிப்பிட்டார்.
அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவருக்கு முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும் என்றும் அவரது பிறந்தநாளில் சமத்துவ உறுதிமொழி எடுக்கப்படும் என்றும் திரு ஸ்டாலின் தெரிவித்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றிய டாக்டர் அம்பேத்கர், தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர்.

