கனமழை: மின்னல் தாக்கி ஏழு பேர் பலி

கனமழை: மின்னல் தாக்கி ஏழு பேர் பலி

2 mins read
27ef434c-a87f-4716-9c9f-3e834525dc45
-

மதுரை: தென் மாவட்­டங்­களில் தொடர்ந்து கன­மழை நீடித்து வரும் நிலை­யில், ஒரே நாளில் ஏழு பேர் மின்­னல் தாக்கி உயி­ரிழந்­துள்ளனர்.

தமி­ழ­கத்­தில் கோடை காலம் தொடங்கி உள்­ளது. நாளுக்கு நாள் வெயி­லின் தாக்­கம் அதி­க­ரித்­ததை அடுத்து மக்­கள் வீடு­களை விட்டு வெளி­யேற தயங்­கி­னர்.

இந்­நி­லை­யில், எதிர்­பா­ரா­த­வி­த­மாக பல்­வேறு மாவட்­டங்­களில் திடீ­ரென கடந்த இரு தினங்­க­ளாக பலத்த மழை பெய்து வரு­கிறது. குறிப்­பாக, விரு­து­ந­கர், கள்­ளக்­குறிச்சி, ராணிப்­பேட்டை உள்­ளிட்ட மாவட்­டங்­களில் பலத்த மழை பெய்து வரு­கிறது.

கேரள கட­லோ­ரப் பகு­தி­யில் வளி­மண்­டல மேல­டுக்கு சுழற்சி கார­ண­மாக அம்­மா­நி­லத்­தில் பலத்த மழை பெய்­கிறது. இதன் எதி­ரொ­லி­யாக தமி­ழ­கத்­தி­லும் கோடை மழை தொடங்­கி­யுள்­ளது. கேர­ளாவை ஒட்டி­யுள்ள கோவை மாவட்­டத்­தில் நேற்று முன்­தி­னம் சில மணி நேரம் நீடித்த மழை கார­ண­மாக அங்கு குளிர்ச்சி நில­வு­கிறது.

திண்­டுக்­கல், தேனி, தூத்­துக்­குடி, நாகை ஆகிய மாவட்­டங்­க­ளி­லும் நேற்று முன்­தி­னம் மழை கொட்­டித் தீர்த்­தது.

இந்­நி­லை­யில், கன­ம­ழைக்கு மத்தி­யில் வெவ்­வேறு பகு­தி­களில் ஏழு பேர் மின்­னல் தாக்கி உயிரிழந்து­விட்­ட­னர்.

விரு­து­ந­க­ரில் உள்ள ஒரு வீட்­டில் கட்­டு­மா­னப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த தொழி­லா­ளர்­களில் நான்கு பேர் திடீ­ரென மின்­னல் தாக்­கி­ய­தில், உடல்­க­ருகி பலி­யாகி­னர்.

இதே­போல, கள்­ளக்­கு­றிச்­சியை அடுத்த நிறை­மதி கிராம ஏரி­யில் ஆடு மேய்த்­துக்­கொண்­டி­ருந்த ஜெயக்­கொடி மீது மின்­னல் தாக்கிய­தில் அவர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார். அவர் மேய்த்­துக் கொண்­டி­ருந்த நான்கு ஆடு­களும் மின்­னல் தாக்கி பலி­யா­கின.

கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டத்­தில் உள்ள திரு­வ­திகை கிரா­மத்­தைச் சேர்ந்த சீனி­வா­சன் மின்­னல் தாக்கி­ய­தில் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தார். அப்­போது அவ­ரு­டன் இருந்த 23 வயது இளை­யர் ஒரு­வர் படு­கா­ய­ம­டைந்து சிகிச்சை பெற்று வரு­கி­றார்.

அர­சுப் பணி­யி­டத் தேர்­வுக்­காக மரத்­தின் நிழ­லில் அமர்ந்து படித்­துக்கொண்­டி­ருந்த இரு இளை­யர்­களில் ஒரு­வர் உயி­ரி­ழந்த நிலை­யில், அவ­ரு­டன் இருந்த மற்­றொ­ரு­வர் படு­கா­யங்­க­ளு­டன் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கி­றார்.

இதற்­கி­டையே, மின்­னல் தாக்கி உயி­ரி­ழந்த குடும்­பத்­தா­ருக்கு முதல்­வ­ரின் பொது நிவா­ரண நிதி­யில் இருந்து இரண்டு லட்­சம் ரூபாய் வழங்­கப்­படும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.