விருந்து கசந்தது; ஆளுநர் அழைப்பை அரசு நிராகரித்தது

விருந்து கசந்தது; ஆளுநர் அழைப்பை அரசு நிராகரித்தது

2 mins read
823404d4-7853-4b00-bfc8-2eb5cfc18e83
-

புத்தாண்டு அன்று மாளிகை செல்லாமல் திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பைக் காட்டின

சென்னை: தமிழ்­நாட்­டில் அர­சுக்கும் ஆளு­ந­ருக்­கும் இடை­யில் விரி­சல் அக­ல­மாகி வரு­வ­தைப் போல் தெரி­கிறது. தமிழ் புத்­தாண்­டை­யொட்டி மாநி­ல ஆளு­நர் ரவி அளித்த விருந்தை தமி­ழக அரசு நிரா­க­ரித்து­ விட்­டது.

ஆளு­நர் மாளி­கை­யில் நடந்த அந்த விருந்­தில் முதல்­வர், அமைச்­சர்­கள், அரசு அதி­கா­ரி­கள் ஆகி­யோ­ரும் காங்­கி­ரஸ் உள்­ளிட்ட திமுக கூட்­டணி கட்­சி­களும் கலந்து­கொள்­ள­வில்லை.

இது பற்றி கருத்து கூறிய திமுக வட்­டா­ரம் "மதி­யா­தார் வாயிலை மிதிக்க வேண்­டாம் என்று நாங்­கள் விருந்­தைப் புறக்­க­ணித்­து­விட்­டோம்," எனக் கூறி­யது.

அந்த விருந்து நிகழ்ச்­சி­யை­யொட்டி ஆளு­நர் மாளி­கை­யில் தமிழ்க்­க­வி­ஞர் பார­தி­யா­ரின் சிலை திறப்பு விழா­வும் நடக்­க­வி­ருந்­தது.

விருந்­தில் அதி­முக, பாஜக, தமாகா ஆகிய கட்­சி­கள் மட்­டுமே கலந்­து­கொண்­டன.

மாநி­லத்­தின் ஆளு­நர் அர­சாங்­கத்தை மதிப்­பதே இல்லை. தமி­ழக மக்­க­ளின் நலன்­க­ளுக்கு எதி­ராக அவர் செயல்­பட்டு வரு­கி­றார் என்று திமுக உள்­ளிட்ட கட்­சி­கள் குறை­கூறி வரு­கின்­றன.

நீட் எனப்­படும் மருத்­துவ தேர்­வில் இருந்து தமிழ்­நாட்­டுக்கு விலக்கு அளிக்க வேண்­டும் என்று கூறும் தீர்­மா­னத்தை தமி­ழக சட்­ட­மன்­றம் இரண்டு முறை நிறை­வேற்றி அதி­ப­ரின் அங்­கீ­கா­ரம் பெறு­வ­தற்­காக அதை ஆளு­ந­ரி­டம் அனுப்­பி­வைத்­தது.

ஆனால் அந்­தத் தீர்­மானங்­ களை­யும் தமி­ழக அர­சின் இதர தீர்­மா­னங்­க­ளை­யும் அதி­ப­ரின் ஒப்­பு­த­லுக்கு அனுப்­பி­வைக்­கா­மலேயே ஆளுநர் இருந்து வரு­கி­றார் என்று தமி­ழக அரசு தெரி­விக்கிறது.

அந்­தத் தீர்­மா­னங்­களை அதி­ப­ரி­டம் அனுப்பி வைக்­கும்­படி நேரடி­யாக ஆளு­நரை சந்­தித்து அமைச்­சர்­கள் கேட்­ட­தா­க­வும் ஆனால் அதற்­கும் ஆளு­நர் அசைந்து­கொடுக்­கவில்லை என்­றும் முதல்­வர் ஸ்டாலின் கூறினார்.

நீட் தேர்­வுக்கு எதி­ரான தீர்­மானத்தை உட­ன­டி­யாக அதி­ப­ரி­டம் அனுப்­பி­வைத்து உத­வும்­படி ஆளு­நருக்கு முதல்­வர் மீண்­டும் கோரிக்கை விடுத்­தார்.

"அர­சும் ஆளு­ந­ரும் அர­ச­மைப்புச் சட்ட கட­மை­களை ஆக்­க­க­ர­மான முறை­யில் நிறை­வேற்றி வந்­தால் மாநி­லம் தொடர்ந்து செழிப்­ப­டை­யும், முன்­னேற்­றம் அடை­யும். அர­சுக்­கும் ஆளு­ந­ருக்­கும் இடைப்­பட்ட உறவு மன­மு­வந்­த­தாக தொடர்ந்து இருந்து வரும், இதன் மூலம் தமி­ழக மக்­க­ளின் நலன்­கள் தலை­சிறந்த முறை­யில் காக்­கப்­படும் என்று நம்­பு­கி­றேன்," என தனது கடி­தத்­தில் முதல்­வர் குறிப்­பிட்­டார்.

புத்தாண்டு அன்று பல்­வேறு திட்­டங்­களை காணொளி மூலம் முதல்வர் தொடங்கிவைத்­தார்.