இன்று கள்ளழகர் விழா: வெள்ளம்; ஆற்றில் இறங்க பக்தருக்கு தடை

இன்று கள்ளழகர் விழா: வெள்ளம்; ஆற்றில் இறங்க பக்தருக்கு தடை

2 mins read
a9aeef22-f2a4-45fa-a31d-d8ed43bba18a
-

மதுரை: உல­கப் புகழ்­பெற்ற மதுரை சித்­திரை திருவிழாவை ஒட்டி கள்ள­ழ­கர் வைகை ஆற்­றில் எழுந்­தரு­ளும் விழா இன்று காலை 5.30 மணி முதல் 6.20 மணிக்­குள் நடக்­கிறது. கொரோனா கார­ண­மாக கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக இந்த விழா­வில் பக்­தர்­கள் நேர­டி­யா­கக் கலந்­து­கொள்­ள­வில்லை.

இந்த ஆண்டு விழா­வில் கலந்து ­கொண்டு ஆற்­றில் இறங்கி கள்ளழ கரைத் தரி­ச­னம் செய்ய பக்­தர்­கள் மிக­வும் ஆர்­வத்­து­டன் காத்­தி­ருந்த நிலை­யில், மதுரை வைகை ஆற்­றில் நீர்வரத்து அதி­கரித்­து­விட்­டது.

ஆகை­யால், பக்­தர்­கள் ஆற்­றில் இறங்கி சுவா­மி­யைத் தரி­ச­னம் செய்ய அனு­மதி இல்லை என மதுரை மாவட்ட ஆட்­சி­யர் நேற்று அறி­வித்­தார். கரை­யோ­ரங்­களில் இருந்­த­படி சாமி கும்­பி­டும்­படி மக்­களுக்கு ஆட்­சி­யர் வேண்­டுகோள் விடுத்­தார்.

மது­ரை­யில் சித்­ராபௌர்­ணமியை ஒட்டி 12 நாள்கள் நடக்­கும் சித்­தி­ரைத் திரு­விழா உல­கப் புகழ்­பெற்­ற­தா­கும். சித்­தி­ரைத் திரு­விழா இம்­மா­தம் 5ஆம் தேதி கொடி­யேற்­றத்­து­டன் தொடங்­கி­யது.

இந்­தத் திரு­வி­ழா­வின் சிகர நிகழ்ச்­சி­யான மீனாட்சி-சுந்­த­ரே­சு­வரர் திருக்­கல்­யா­ணம் வியா­ழக்­கிழமை நடந்­தது. விழா­வின் மற்­றொரு முக்­கிய அம்­ச­மான தேரோட்­டம் நேற்று நடந்­தது.

ஆயி­ரக்கணக்­கான பக்­தர்­கள் கலந்­து­கொண்டு தேரை இழுத்­துச் சென்­ற­னர். திரு­வி­ழா­வைக் காண மதுரை, சுற்று வட்­டா­ரங்­களில் இருந்­தும் அண்டை மாநி­லங்­களில் இருந்­தும் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்­தும் லட்­சக்­க­ணக்­கான மக்­கள் வந்­திருப்­ப­தால் மதுரை எங்­கும் மக்­கள் வெள்­ள­ம் காணப்­ப­டு­வ­தாக தக­வல்­கள் தெரி­வித்­தன.

வைகை ஒரு­பு­றம் இருக்க, கன­மழை கார­ண­மாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், குற்றால அருவி உள்ளிட்ட பல இடங்­களில் நீர்வரத்து அதி­க­ரித்­துள்­ளது என்­பதும் தெரி­ய­வ­ரு­கிறது.

திருப்­பூர் மாவட்­டம் உடு­மலையை அடுத்த திரு­மூர்த்­தி­மலை அம­ண­லிங்­கேஸ்­வ­ரர் கோயிலை காட்­டாற்று வெள்­ளம் சூழ்ந்­ததாக நேற்று ஊட­கத் தக­வல்­கள் தெரி வித்தன.