விவசாயிகளுக்கு 100,000 இலவச மின் இணைப்புகள்

1 mins read
f1fbd692-488d-4db1-9c77-19f996b5e020
-

சென்னை: சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லின்­போது அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­யின்­படி கடந்த ஆறு மாதங்­களில் மட்­டும் நூறா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட விவ­சா­யி­க­ளுக்கு இல­வச மின் இணைப்பு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

இத­னால், தமி­ழ­கத்­தில் வேளாண் தொழில் செய்­வோர் எண்­ணிக்கை 22.80 லட்­ச­மாக உயர்ந்­துள்­ளது என்று நேற்று முன்­தி­னம் விவ­சா­யி­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டல் நிகழ்­வின்­போது அவர் குறிப்­பிட்­டார்.

"ஒரு லட்­சம் இல­வச இணைப்பு கார­ண­மாக ஒரு லட்­சம் விவ­சா­யி­க­ளின் குடும்­பங்­கள் மட்­டு­மல்ல, அவர்­க­ளது வேளாண் உற்­பத்­தி­யால் தமி­ழ­கம் அடை­யும் வளர்ச்சி என்ன என்­பதை சிந்­தித்து பார்க்க வேண்­டும். "1990 வரை விவ­சா­யி­கள், வேளாண்­மைக்­காக பயன்­ப­டுத்­தும் மின்­சா­ரத்­துக்­குக் கட்­ட­ணம் செலுத்தி வந்­தார்­கள்.

"ஒவ்­வொரு உழ­வ­ரி­ட­மி­ருந்து 10 குதி­ரைத்­தி­றன்­வரை உள்ள மின் மோட்­டார்­க­ளுக்கு குதி­ரைத்­தி­றன் ஒன்­றிற்கு 50 ரூபாய் வீத­மும், 10 குதி­ரைத் திற­னுக்கு மேல் உள்ள மின் மோட்­டார்­க­ளுக்கு ஒரு குதி­ரைத் திற­னுக்கு 75 ரூபாய் வீத­மும் ஆண்­டு­தோ­றும் கணக்­கிட்டு வசூ­லிக்­கப்­பட்டு வந்­தது.

"அதன் பின்­னர் காலஞ்­சென்ற முன்­னாள் முதல்­வர் அனைத்து உழ­வர்­க­ளுக்­கும் இல­வச மின்­சா­ரம் என்று அறி­வித்­தார்.

"அதன்­படி கடந்த திமுக ஆட்­சி­யில் 2010-2011 கால­கட்­டத்­தில் அதி­க­பட்­ச­மாக ஒரே ஆண்­டில் 77,158 வேளாண் மின் இணைப்­பு­கள் உழ­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

கடந்த 10 ஆண்­டு­கால ஆட்­சி­யில் 2011 முதல் 2021 வரை உழ­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட வேளாண் மின் இணைப்­பு­கள் 2,21,579 மட்­டுமே வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.