சீமான்: போலிச் சான்றிதழ் அளித்த வடமாநிலத்தவரை பணிநீக்கம் செய்க

சீமான்: போலிச் சான்றிதழ் அளித்த வடமாநிலத்தவரை பணிநீக்கம் செய்க

2 mins read
f02a18db-c3e0-4560-b2fb-aefdb7eb09ab
-

சென்னை: போலிச்­சான்­றி­தழ் கொடுத்து மத்­திய அர­சுப் பணி­யில் சேர்ந்த 300 வட­மா­நி­லத்­த­வரை பணி­நீக்­கம் செய்ய வேண்­டும் என்­றும் இது தொடர்­பாக மத்­திய அர­சுக்கு உட­ன­டி­யா­க தமி­ழக அரசு உரிய அழுத்­தம் கொடுக்க வேண்­டும் என்­றும் நாம் தமி­ழர் கட்சி வலி­யுறுத்தி உள்­ளது.

இந்த முறை­கேட்­டில் தொடர்­பு­டைய அனை­வ­ருக்­கும் சட்­டப்­படி உரிய தண்­டனை கிடைப்­பதை தமி­ழக அரசு உறுதி செய்ய வேண்­டும் என்று அக்­கட்­சி­யின் தலைமை ஒருங்­கி­ணைப்­பா­ளர் சீமான் அறிக்கை ஒன்­றில் வலி­யு­றுத்தி உள்­ளார்.

வட மாநி­லத்­த­வர்­கள் செய்­துள்ள இந்த முறை­கேடு கடும் அதிர்ச்சி அளிப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், முறை­கே­டான வழி­களில் தமி­ழர்­க­ளது வேலை­வாய்ப்­பு­க­ளைத் தொடர்ந்து பறித்­து­வ­ரும் வட­மா­நி­லத்­த­வர்­க­ளின் மேலா­திக்­கத்தை திரா­விட அர­சு­கள் தடுக்­கத்­த­வ­றி­விட்­ட­தா­கச் சாடி உள்­ளார்.

"இத்­த­கைய முறை­கே­டு­களை கைகட்டி வேடிக்கைப் பார்க்­கும் திரா­விட அர­சு­க­ளின் அலட்­சி­யப்­போக்கு வன்­மை­யான கண்­ட­னத்­திற்­கு­ரி­யது.

"மத்­திய அர­சின் பொதுத்­துறை நிறு­வன வேலை வாய்ப்­பில் அந்­தந்த மாநி­லங்­க­ளைச் சேர்ந்த இளை­ஞர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்க வேண்­டும் என்­ப­தற்­காக குஜ­ராத், மத்­தி­யப்­பி­ர­தே­சம், உத்­த­ர­கண்ட், மிசோ­ரம், சிக்­கிம், மணிப்­பூர், கர்­நா­ட­கம் உள்­ளிட்ட பல்­வேறு மாநி­லங்­கள் தனிச்­சட்­டமே இயற்­றி­யுள்­ளன," என்று சீமான் தமது அறிக்­கை­யில் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

மேலும், தனி­யார் துறை­களில் 80% அள­வுக்கு மண்­ணின் மைந்­தர்­க­ளுக்­குப் பணி வாய்ப்பு வழங்க வேண்­டு­மென்று கர்­நா­டகா, ஆந்­திரா, மகா­ராஷ்­டிரா, ஹரி­யானா உள்­ளிட்ட மாநில அர­சு­கள் சட்­ட­மி­யற்­றி­யுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், திமுக அரசு இனி­யா­வது விழித்­துக் கொள்ள வேண்­டும் எனக் கூறி­யுள்­ளார்.

"தமி­ழர்­க­ளது பணி­வாய்ப்­பு­கள் பறி­போ­வதை உட­ன­டி­யா­கத் தடுத்து நிறுத்த தமி­ழ­கத்­தில் உள்ள அனைத்து அரசு, தனி­யார் பணி­யி­டங்­களில் 80% தமி­ழர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டி­யது கட்­டா­யம் என்று நடப்பு சட்­ட­மன்­றக் கூட்­டத் தொட­ரி­லேயே தனிச்­சட்­டம் நிறை­வேற்ற வேண்­டும்.

"இதன் மூலம் மாநி­லம் முழு­வ­தும் வேலை­வாய்ப்பு அலு­வ­ல­கத்­தில் பணிக்­கா­கப் பதிவு செய்து காத்­தி­ருக்­கும் ஒரு­கோடி தமி­ழக இளை­ஞர்­க­ளின் எதிர்­கா­லத்­தைப் பாது­காக்க வேண்டும்," என்று சீமான் தமது அறிக்­கை­யில் மேலும் வலி­யு­றுத்தி உள்­ளார்.