நிலத்தகராறு: மூவர் பலி; நால்வர் கைது; பதற்றம்; காவலர் குவிப்பு

நிலத்தகராறு: மூவர் பலி; நால்வர் கைது; பதற்றம்; காவலர் குவிப்பு

2 mins read
4af3930f-e1d0-4b11-8328-9ad817120ab0
-

திரு­நெல்­வேலி: நெல்லை அருகே நிலத்­த­க­ராறு கார­ண­மாக இரு உற­வி­னர்கள் குடும்­பத்­துக்­குள் ஏற்­பட்ட மோத­லில் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த பெண் உள்­பட மூவர் படு­கொலை செய்­யப்­பட்­ட­னர்.

சண்­டை­யைத் தடுக்­கச் சென்ற இரு­வர் மீது சர­மா­ரி­யாக அரி­வாள் வெட்டு விழுந்­ததை அடுத்து, பாளை­யங்­கோட்டை அரசு மருத்­து­வ­ம­னை­யில் அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்­பாக பாஜக நிர்­வாகி அழ­கர்­சாமி, அவ­ரு­டைய மனைவி பேச்­சி­யம்­மாள், செந்­தூர்­கு­மார், உற­வி­னர் ராஜ லட்­சுமி ஆகிய நால்­வரைக் கைது செய்­துள்ள காவல்­து­றை­யி­னர் அவர்­க­ளி­டம் தீவிர விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

தப்­பி­யோ­டிய சுந்­த­ர­பாண்டி, ராஜ மணி­கண்­டன் ஆகிய குற்­ற­வா­ளி­களைப் பிடிக்க டிஐஜி பிர­வேஷ் குமார் உத்­த­ர­வின்­பே­ரில் மூன்று தனிப்­படை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

கொலைச் சம்­ப­வம் காரணமாக பதற்­றம் நில­வு­வதை அடுத்து, நாஞ்­சான்­கு­ளம் பகு­தி­யி­லும் பாளை யங்­கோட்டை அரசு மருத்­து­வ­மனை யிலும் ஏரா­ள­மான காவல்­துறை யினர் பாதுகாப்புக்காக குவிக்­கப்­பட்டு உள்­ள­னர்.

திரு­நெல்­வேலி மாவட்­டம், தாழை­யூத்து அருகே உள்ள நாஞ்­சான்­கு­ளத்­தைச் சேர்ந்­த­வர் ஜேசு­ராஜ், 60. இவ­ரது சித்­தப்பா மகன் அழ­கர்­சாமி, 50, மானூர் ஒன்­றிய பாஜக நிர்­வாகி.

இவர்­க­ளது குடும்­பச் சொத்­தான இரண்டு ஏக்­கர் நிலத்தை பங்­கீடு செய்­வது தொடர்­பான வழக்கு நிலு­வை­யில் இருந்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், சர்ச்­சைக்­கு­ரிய நிலத்­தில் ஜேசு­ராஜ் தரப்­பி­னர் ஆழ்­து­ளைக் கிணறு தோண்­டி­ய­தால் பிரச்­சினை வெடித்­துள்­ளது.

இதற்கு அழ­கர்­சாமி குடும்­பத்­தி­னர் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து, இரு­த­ரப்­பினருக்­கும் இடையே ஏற்­பட்ட வாக்கு வாதம் கைக­லப்­பாக மாறியுள்ளது. அழ­கர்­சா­மி­யின் மகன்­கள் சுந்­த­ர­பாண்டி, ராஜ­ம­ணி­கண்­ட­ன் உள்­ளிட்­டோர் ஜேசு­ராஜ் குடும்பத்­தி­னரை அரி­வா­ளால் சர­மா­ரி­யாக தாக்கியதில் ஜேசு­ராஜ், அவ­ரது தம்பி மரி­ய­ராஜ், 55, தங்கை வசந்தா, 46, ஆகி­ய மூவரும் உயி­ரி­ழந்­த­னர்.

இதுகுறித்து திரு­நெல்­வேலி டிஐஜி பிர­வேஷ் குமார் செய்தி யாளர்­க­ளி­டம் பேசி­ய­போது, "நாஞ்­சான்­கு­ளம் கிரா­மத்­தில் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த மூவர் நிலத்­த­கராறு கார­ண­மாக படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­னர். நால்­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். மூன்று தனிப்­படை­யி­னர் தப்பியோடிய கொலை­யா­ளி­களைத் தேடி வரு­கின்­ற­னர். அவர்­க­ளும் விைரவில் கைதாவார் கள்," என்று கூறி­னார்.