திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி: மலேசியா, சிங்கப்பூரைச் சேர்ந்தோரும் பங்கேற்பு

திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி: மலேசியா, சிங்கப்பூரைச் சேர்ந்தோரும் பங்கேற்பு

1 mins read
fd9a2e46-2738-465b-97b2-805d223f2616
மூன்று சுற்றுகளாக நடைபெற்ற அழகிப் போட்டியில் தலைநகர் சென்னையைச் சேர்ந்த சாதனா முதல் இடத்தையும் மதுமிதா இரண்டாம் இடத்தையும் எல்சா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு மணி மகுடம் சூட்டப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. படம்: தமிழக ஊடகம் -

விழுப்புரம்: சென்­னை­யைச் சேர்ந்த திரு­நங்கை சாதனா கூவா­கத்­தில் நடந்த போட்­டி­யில் மிஸ் திரு­நங்­கை­யா­கத் தேர்வு செய்­யப்­பட்­டார்.

விழுப்­பு­ரம் மாவட்­டம், கூவா­கம் கிரா­மத்­தில் உள்ள கூத்­தாண்­ட­வர் கோயி­லில் ஆண்­டு­தோ­றும் சித்­திரை திரு­விழா உற்­சா­கத்­து­டன் நடை­பெ­று­வது வழக்­கம்.

கொரோனா ஊரடங்­கால் கடந்த இரண்­டாண்­டு­க­ளாக தடை­பட்­டி­ருந்த திரு­விழா இவ்வாண்டு கடந்த 5ஆம் தேதி தொடங்­கி­யது.

விழா­வில் பங்­கேற்க தமி­ழ­கம் மட்­டு­மின்றி பல்­வேறு மாநி­லங்­களில் இருந்­தும் சிங்­கப்­பூர், மலே­சியா உள்­ளிட்ட வெளி­நா­டு­களில் இருந்­தும் ஏரா­ள­மான திரு­நங்­கை­கள் விழுப்­பு­ரத்­தில் குவிந்­துள்­ள­னர்.

அவர்­களை மகிழ்­விக்­கும் வித­மாக விழுப்­பு­ரம் கலை­ஞர் அறி­வா­ல­யத்­தில் நேற்று முன்­தி­னம் பல்­வேறு கலை­நி­கழ்ச்­சி­கள் நடை ெபற்­றன.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திமுக எம்­பிக்­கள் திருச்சி சிவா, ரவிக்­கு­மார், நடி­கர் சூரி, நடிகை நளினி உள்­ளிட்ட பலரும் விழாவில் கலந்­து­கொண்­ட­னர். திரு­நங்­கை­க­ளுக்­கான நட­னம், பராம்­ப­ரிய கிரா­மிய இசைப் போட்டிகளும் நடை­பெற்­றன.

மிஸ் திரு­நங்­கைக்­கான அழ­கிப் போட்­டி­யில் விழிப்­பு­ணர்­வுக் கேள்­வி­க­ளுக்கு சிறப்­பா­கப் பதி­ல­ளித்த சென்­னை­யைச் சேர்ந்த சாதனா மிஸ் திரு­நங்­கை­யாக தேர்வு செய்­யப்­பட்­டார். சென்­னை­யைச் சேர்ந்த மது­மிதா இரண்­டா­ம் இடத்­தை­யும் எல்சா மூன்­றா­வது இடத்ை­த­யும் பிடித்­த­னர்.

"சாலை­களில் கையேந்தி நிற்­கும் திரு­நங்­கை­களே இல்­லாத அள­வில் அவர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­கள் வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என அமைச்சர் பொன்முடி ெதரி­வித்­தார்.

திரு­நங்­கை­க­ளுக்கு கல்வி, வேலை­வாய்ப்­பில் இடஒதுக்­கீடு பெற்­றுத்தர திமுக முயற்சி செய்­யும் என்­றும் அவர் கூறினார்.