திருவள்ளூர்: சென்னையிலிருந்து ரத யாத்திரையாக பயணம் புறப்பட்டுள்ள பாரதியார்-செல்லம்மாள் சிலை ஜூன் 27ஆம் தேதி கடையத்தில் நிறுவப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
தென்காசி மாவட்டம், கடையம் பகுதியை நோக்கிச் செல்லும் இந்த ரத யாத்திரையை மகாகவி பாரதி-செல்லம்மாவின் கொள்ளுப் பேத்தி உமாபாரதி துவக்கிவைத்தார்.
செல்லம்மாவின் தோளில் கைவைத்தபடி உள்ள பாரதியின் ஏழடி உயரச் சிலை தயாராகி, நான்கு ஆண்டுகளாக கடையம் செல்வதற்காக காத்திருந்த நிலை யில், இப்போதுதான் அதற்கான பயண நேரம் கனிந்துள்ளதாக இந்தச் சிலையை உருவாக்கிய சிற்பி சுரேந்திரநாத் கூறியுள்ளார்.
தேசியக் கவிஞர் பாரதியாரின் துணையுடன் ஏறக்குறைய ஒன்றரை மாதகாலம் மாநிலம் முழுவதும் இந்த ரதம் தரிசனம் தந்துவிட்டுத்தான் பிறந்த ஊரான கடையத்துக்கு வரவுள்ளது. செல்லம்மாளை வரவேற்க கடையம் பகுதி மக்கள் ஆவலுடன் தயாராகி வருகின்றனர்.

