கம்பம்: தேனி மாவட்டத்தில் உறவினர் ஒருவரது தோட்டத்தில் முதுமக்கள் தாழி உள்ளதை கவிபாரதி என்ற மாணவி கண்டுபிடித்து, இதுகுறித்து தமிழக அரசுக்குத் தெரிவித்து, அதனைப் பாதுகாப்பதற்கு ஏற்பாடு செய்யும்படி கோரிக்ைக விடுத்துள்ளார்.
தேனி மாவட்டம், காக்கில் சிக்கையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டிக்குமார். இவரது மகள் கவிபாரதி, தஞ்சாவூர் அரசு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் பிரிவில் படித்து வருகிறார்.
தமிழ்ப் புத்தாண்டின்போது குள்ளப்ப கவுண்டன்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுத் தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அங்கு தோட்ட வேலைக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் முதுமக்கள் தாழியினை அடையாளப்படுத்தும் விதமாக மண்ணால் ஆன பெருங்குளுக்கை இருப்பதைப் பார்த்தார்.
அதனை மேலும் தோண்டியதில் முன்னோர்கள் இறப்பின்போது பயன்படுத்தும் முதுமக்கள் தாழியில் உள்ள சின்னஞ்சிறு ஈமச்சடங்கு செய்த மண் பாண்டங்கள் இருப்பது தெரியவர இதுகுறித்து கல்லூரிக்குத் ெதரிவித்தார்.

