அரசுப் பள்ளிகளை ேமம்படுத்த மேலாண்மைக் குழு சீரமைப்பு

2 mins read
71196210-cbbd-45b0-b455-0382c34f6906
-

சென்னை: யாரா­லும் திருட முடி­யாத சொத்து ஒன்று உண்டு என்­றால் அது கல்­வி­மட்டும்தான் என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்ளார். திரும்பக் கிடைக்­காத மகிழ்ச்­சி­யான காலம் பள்­ளிப்­ப­ரு­வம் என­வும் அவர் கூறியுள்ளார்.

அர­சுப் பள்­ளி­களில் செயல்­பட்டு வரும் பள்ளி மேலாண்­மைக் குழுக்­களை மறு கட்­ட­மைப்பு செய்­வ­தற்­கான பணி­களைச் சென்னை திரு­வல்­லிக்­கேணியிலுள்ள லேடி வெலிங்­டன் மேல்­நி­லைப்பள்­ளி­யில் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேற்று தொடங்கிவைத்துப் பேசினார்.

"பள்­ளிக் கல்­விக்கு மிகமிக முக்­கி­யத்­து­வத்தை தமி­ழக அரசு வழங்கி வரு­கிறது.

"அர­சுப் பள்­ளி­களை முழு­மை­யாக மேம்­ப­டுத்­து­வ­தற்­காக பள்ளி மேலாண்­மைக் குழுக்­களை சீர­மைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை பள்­ளிக் கல்­வித் துறை மேற்­கொண்டு வரு­கிறது.

''பள்­ளி­களில் படிக்­கக்­கூ­டிய குழந்­தை­க­ளின் பெற்­றோர், தலைமை ஆசி­ரி­யர்­கள், ஆசி­ரி­யர்­கள், உள்­ளாட்­சிப் பிர­தி­நி­தி­கள், கல்­வி­யா­ளர்­கள் போன்­றோர் இந்­தப் பள்ளி மேலாண்­மைக் குழு­வில் இடம்­பெ­று­வார்­கள்.

"ஒவ்­வொரு அர­சுப் பள்­ளி­யும் தன்­னி­றைவு பெற்­றுள்ள பள்­ளி­யாக மாற­வேண்டும். பள்­ளி­யின் தேவையறிந்து அவற்றை வழங்க வேண்­டும். குழந்­தை­க­ளுக்குத் தர­மான கல்வி வழங்க நட­வ­டிக்­கை­களை எடுக்கவேண்­டும்.

"இவற்றைச் செயல்­ப­டுத்­து­வ­தற்­கா­கத்­தான் பள்ளி மேலாண்­மைக் குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது.

"படிப்பை கைவி­டு­வதை தவிர்த்­தல், படிப்பைக் கைவிட்ட குழந்­தை­களை அவர்­க­ளது வய­துக்­கேற்ற வகுப்­பில் மீண்­டும் பள்­ளி­யில் சேர்த்­தல், பள்­ளி­யின் சுற்­றுப்­புறச் சூழ­லைத் தூய்­மை­யாக்­கு­தல் போன்ற செயல்­பா­டு­களில் புதிய மேலாண்­மைக் குழுவினர் ஆக்­க­பூர்­வ­மாகச் செய­லாற்ற வேண்­டும்.

"அனைத்து வகை வன்முறை களில் இருந்தும் குழந்தைகளைப் பாதுகாத்து, அவர்கள் ஒரு­வ­ரு­டன் ஒரு­வர் அன்­பு­டன் பழ­கும் சூழலை உரு­வாக்கவேண்­டும்.

"இவை அனைத்தையும் செயல்­ப­டுத்­து­வ­தற்­கா­கத்தான் குழு அமைக்­கப்­பட்­டுள்ளது.

"மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள், பெற்­றோர் ஆகிய மூவ­ரு­டைய சிந்­த­னை­யும் ஒரே நேர்க்­கோட்­டில் இருந்­தால்­தான் கல்வி நீரோடை மிகச் சீரா­கச் செல்ல முடி­யும். அதில் எவர் ஒரு­வர் தடங்­கல் செய்­தா­லும் கல்­விப் பய­ணம் தடைப்­பட்­டு­வி­டும்.

"குழந்­தை­க­ளின் கல்வி என்­பது ஒரு சமூ­கத்­தின் எதிர்­கா­லத்­திற்­கான அடித்­த­ளம். அவர்­க­ளுக்கு அளிக்­கப்­படும் தர­மான கல்­வி­தான் சமு­தாய முன்­னேற்­றத்­தின் திற­வு­கோல்," என்று உரையாற்றினார் முதல்வர்.

ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது ஏழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். திருட முடியாத ஒரு சொத்து என்றால் அது கல்வி மட்டும்தான். உங்கள் குழந்தைகள் என்னவாக விரும்புகிறார்களோ அதற்குத் தடை போடாமல் நிறைவேற்ற பெற்றோர் வழிகாட்டுங்கள். உங்கள் கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்காதீர்கள்.

முதல்­வர் மு.க.ஸ்டா­லின்