தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நகைக்கடை சுவரில் துளையிட்டு நகைகள் திருட்டு: 4 மணி நேரத்தில் நால்வர் கைது

2 mins read
b1482f5c-9b3f-4266-a8b5-120c19ad8269
மீட்கப்பட்ட நகைகளுடன் திருடர்கள். படம்: தமிழக ஊடகம் -

தூத்­துக்­குடி: தூத்­துக்­கு­டி­யில் நகைக்­க­டை­யின் சுவ­ரில் துளை­யிட்டு கொள்ளை அடிக்கப்பட்ட எட்டு கிலோ தங்க, வெள்ளி நகை­கள் மீட்கப்பட்டன.

கொள்ளைச் சம்பவம் நடந்த நான்கு மணி நேரத்­தில் நால்வர் கொண்ட கும்பலை கைது செய்­த­ காவல்துறையினரை மாவட்டக் காவல் கண்­கா­ணிப்­பாளா் டாக்­டர் பாலாஜி சர­வ­ணன் பாராட்டினார்.

தூத்­துக்­குடி பிர­யன்ட்­ ந­க­ரைச் சோ்ந்தவா் முரு­கன். இவர், சிதம்­ப­ர­நகர் சாலை­யில் நகைக்கடை நடத்தி வரு­கிறாா்.

இந்­நி­லை­யில், வழக்­கம் போல் வியா­பா­ரம் முடிந்­த­தும் நேற்று முன்­தி­னம் இரவு வியா­பா­ரத்தை முடித்து­விட்டு கடை­யைப் பூட்டிவிட்­டுச் சென்ற முரு­கன், மறு­நாள் காலை கடை­யைத் திறந்­த­போது, உள்ளே இருந்த பொருள்­கள் சித­றிக் கிடந்­துள்ளன.

கடை­யின் பின்­பக்­கச் சுவ­ரில் துளை­யிட்டு தங்­கம், வெள்ளி நகை­களைக் கொள்­ளை­யர்­கள் திரு­டிச் சென்­றி­ருப்­பது அறிந்து அதிர்ச்சி அடைந்­தார்.

இது­கு­றித்து, தென்­பா­கம் காவல் நிலை­யத்­துக்கு அவா் தக­வல் அளித்­த­தைத் தொடர்ந்து, காவல் துறை அதி­கா­ரி­கள் விசா­ரணை மேற்­கொண்­டனா். தட­ய­வி­யல் நிபு ணா்களும் தட­யங்­களைச் சேக­ரித்த னா்.

அப்­போது, கடை­யின் பின்­ப­குதி யில் உள்ள சந்­தன மாரி­யம்­மன் கோயி­லில் உள்ள சூலா­யு­தத்தை எடுத்து வந்து சுவ­ரில் துளை­யிட்டு வெள்ளி, தங்­க நகை­களைக் கொள்ளை­ய­டித்துச் சென்றது தெரியவந்­தது.

பின்னர், கடை­யி­லும் அந்­தப் பகு­தி­யி­லும் உள்ள சிசி­டிவி கண்­கா­ணிப்­புக் கேம­ராக்­களிலும் பதி­வான காட்­சி­க­ளின்­படி கொள்­ளை­யர்களைப் பிடிக்­கும் பணி­யில் காவல்துறையினர் ஈடு­பட்­ட­னர்.

இதைத்தொடர்ந்து, தூத்­துக்­குடி லோகி­யா­ந­க­ரைச் சோ்ந்த முனி­ய­சாமி, 24, பிர­யன்ட்­ நகரைச் சேர்ந்த சதீஷ், 20, லெவிஞ்­சி­பு­ரம் சுட­லை­யாண்டி, 29, பதி­னேழு வயது சிறு­வன் ஆகிய நால்­வ­ரும் கைது செய்யப்பட்டனர்.