செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
b6005a6b-b7e1-4603-b7d9-b01e6913c7c7
-

காவல்­துறை கண்­கா­ணிப்பு

அலு­வ­ல­கத்­திற்கு எதிரே கொலை

மதுரை: மதுரை மாவட்ட காவல்­துறை கண்­கா­ணிப்பு அலு­வ­ல­கத்­திற்கு எதிரே உள்ள வணிக வளா­கத்­தி­லுள்ள கடை ஒன்­றின் முன்பு நேற்று காலை இளை­யர் ஒரு­வர் அடித்­துக் கொலை செய்­யப்­பட்டு பிண­மாக கிடந்­தார். இளையர் ஒரு­வர் ரத்த வெள்­ளத்­தில் பிண­மாகக் கிடந்­த­தைக் கண்டு வழிப்­போக்கர்­கள் காவல் நிலை­யத்­திற்­குத் தக­வல் கொடுத்­த­னர்.

கொலை செய்­யப்­பட்ட அந்த இளை­யர் மதுரை கே.புதூர் பாண்­டி­யன் நகரை சேர்ந்த கட்­டி­டத்­தொ­ழி­லாளி ஆனந்த் (வயது 26) என்­பது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது. இது­தொ­டர்­பாக அப்­ப­கு­தி­யில் உள்ள 'சிசி­டிவி'யில் பதி­வா­ன­வற்றை காவல்­துறை அதி­கா­ரி­கள் கைப்­பற்றி விசா­ர­ணையை முடுக்­கி­விட்­டுள்­ள­னர்.

ஆளு­நர் ஆர்.என்.ரவிக்கு எதி­ரா­கக்

கறுப்­புக் கொடி; பாஜக கண்­ட­னம்

சென்னை: தமி­ழக ஆளு­நர் ஆர்.என்.ரவி மயி­லா­டு­துறை தரு­ம­புர ஆதீ­னத்­தைச் சந்­தித்­து­விட்­டுத் திரும்பி வரும்­போது, அவ­ருக்கு எதிர்ப்­புத் தெரி­விக்­கும் வகை­யில் கறுப்­புக் கொடி ஆர்ப்­பாட்­டம் நடத்­தப்­பட்­டது. இதற்கு பாஜ­க­வும் அதன் கூட்­ட­ணிக் கட்­சி­களும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர். எதிர்க்­கட்­சித் தலை­வர் பழ­னி­சாமி, தமாகா தலை­வர் ஜி.கே.வாசன், தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை ஆகியோர் கண்­ட­னம் தெரி­வித்து உள்­ள­னர். இந்நிலையில் ஆளு­ந­ரின் பாது­காப்பு அதி­காரி தமி­ழக டிஜிபி-க்கு கடி­தம் ஒன்றை அனுப்­பி­யுள்­ளார். அதில் அவர், "அதிர்ஷ்­ட­வ­ச­மாக ஆளு­நர், அவ­ரது பாது­காப்பு வாக­னங்­கள் மீது கற்­களோ, கொடி­களோ மற்ற எந்த பொருட்­க­ளாலோ பாதிக்­கப்­ப­டா­மல் காவல்­து­றை­யி­ன­ரால் பாது­காக்­கப்­பட்­டது," என குறிப்­பிட்­டுள்­ளார். இதனை நேற்று சட்­ட­மன்­றத்­தில் முதல்­வர் ஸ்டா­லின் தெரி­வித்­தார்.

'நவீன பரி­சோ­தனை மையம்' ஆக

மாறிய 'அம்மா பரி­சோ­தனை மையம்'

சென்னை: ஓமந்­தூ­ரார் தோட்­டம் அரசு பன்­னோக்கு உயர் சிறப்பு மருத்­து­வ­ம­னை­யில் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்­டது 'அம்மா முழு உடல் பரி­சோ­தனை மையத் திட்­டம்'. அது இப்­போது 'அதி­ந­வீன முழு உடல் பரி­சோ­தனை மையம்' என பெயர் மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது. ஓமந்­தூ­ரார் பல்­நோக்கு மருத்­து­வ­ம­னை­யில் கரு­வில் இருக்­கும் குழந்­தை­யின் உடல் நலத்தை ஆய்வு செய்­யும் அதி­ந­வீன பரி­சோ­த­னைக் கரு­வி திட்­டத்­தின் மூல­மாக இணைக்­கப்­பட்­டது. எனவே, 'அம்மா முழு உடல் பரி­சோ­தனை மையம்' என்­றி­ருந்த திட்­டத்­தின் பெயர் 'அதி­ந­வீன உடல் பரி­சோ­த­னைத் திட்­டம்' என பெயர் மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது.

மோசடி வழக்கு: முன்­னாள் அமைச்­சர் சரோ­ஜா­வுக்கு நிபந்­தனை பிணை

ராசி­பு­ரம்: அர­சாங்­கத்­தில் சத்­து­ண­வுத் துறை­யில் வேலை வாங்­கித் தரு­வ­தாக ரூ.76 லட்­சம் மோசடி செய்­த­தா­கக் குற்­றம்­ சாட்டப்பட்டுள்ள முன்­னாள் அமைச்­சர் சரோ­ஜா­வுக்­கும் அவ­ரது கண­வ­ருக்­கும் ராசி­பு­ரம் நீதி­மன்­றம் நிபந்­த­னை­யு­டன் கூடிய பிணை அளித்­துள்­ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்­ட­மன்றத் தேர்­த­லில் நாமக்­கல் மாவட்­டம் ராசி­பு­ரம் தொகு­தி­யில் போட்­டி­யிட்டு சரோஜா வெற்றி பெற்­றார். இதை­ய­டுத்து ஜெய­ல­லிதா தலை­மை­யி­லான அமைச்­ச­ர­வை­யில் சமூக நலத்­துறை அமைச்­ச­ராகப் பதவி வகித்­தார்.

பழு­தாகி நின்ற லாரி மீது பேருந்து மோதி 2 பேர் பலி; பலர் படு­கா­யம்

அருப்­புக்­கோட்டை: தூத்­துக்­கு­டி­யில் இருந்து உப்பு மூட்­டை­கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னைக்குப் புறப்­பட்­டது. அருப்­புக்­கோட்டை அருகே பாலை­யம்­பட்டி பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் நள்­ளி­ரவு 12 மணி­ய­ள­வில் வந்து கொண்­டி­ருந்­தது. அப்­போது, திடீ­ரென லாரியின் டயர் பழு­தா­னது, சேலம் மாவட்­டம் ஓம­லூரை சேர்ந்த ஓட்டுநர் சித்­தை­யன் (64), அதை ஒக்­கீடு செய்து கொண்­டி­ருந்­தார். அப்­போது திசை­யன்­வி­ளை­யில் இருந்து 36 பய­ணி­க­ளு­டன் சென்னைக்குச் சென்­று­கொண்­டி­ருந்த ஆம்னி பஸ், சாலை­யோ­ரம் நின்­றி­ருந்த லாரி மீது மோதி­யது. இந்த விபத்­தில் இரு­வர் பலி­யா­கி­னர். 13 பேர் படு­கா­ய­ம­டைந்­த­னர். படு­கா­ய­மடைந்த அனை­வ­ரும் அருப்­புக்­கோட்டை அரசு மருத்­து­வ­மனை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

காவல்­துறை அதி­காரி மீது

வாக­னம் ஏற்றி கொல்ல முயற்சி

சூலூர்: புகை­யி­லைப் பொருட்­கள் கடத்­தலை தடுக்­கும் முயற்சி­யில் ஈடு­பட்ட காவல்­துறை ஆய்­வா­ளர் மீது கொள்­கலன் கன­ரக வாக­னத்தை ஏற்றி கொல்ல முயன்ற

ஓட்­டு­நரை காவல்­து­றை­யி­னர் இரண்டு கி.மீட்­டர் தூரத்­திற்கு விரட்­டிச் சென்று கைது­செய்­த­னர். தென்­னம்­பா­ளை­யம் அருகே சந்­தே­கப்­ப­டும்­படி ஒரு கொள்­க­லன் வாக­னம் வந்­தது. அதனை நிறுத்­து­மாறு காவல்­துறை ஆய்­வா­ளர் மாதை­யன் சைகை காட்­டி­னார். ஆனால், அவர் மீது ஏற்­று­வ­து­போல் வேக­மாக வந்த வாகனம், நிற்­கா­மல் சென்­றது. அதனையடுத்து அதிகாரிகள் விரட்டிச்சென்று அந்த லாரியைப் பிடித்தனர். விசாரணையில், லாரி ஓட்டுநர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.