இந்தி திணிப்பு, நுழைவுத் தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்பு, நுழைவுத் தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

2 mins read
f048a7fa-6c12-4e58-9ed5-b43bbd842b01
-

'அனைத்துக் கட்சிகளைக் கூட்டி மத்திய அரசுக்கு முதல்வர் அழுத்தம் தரவேண்டும்'

சென்னை: இந்­தித் திணிப்­பை­யும் மத்­திய பல்­க­லைக்­க­ழ­கங்­களில் நுழை­வுத்­தேர்வு அறி­மு­கம் செய்­யப்­ப­டு­வ­தை­யும் கண்­டித்து மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி சார்­பில் தமி­ழ­கம் முழு­வ­தும் 200க்கும் மேற்­பட்ட இடங்­களில் ஆர்ப்­பாட்­டம் நடந்­தது.

சென்­னை­யில் நடந்த ஆர்ப்­பாட்­டங்­களில் கே.பால­கி­ருஷ்­ணன், ஜி.ராம­கி­ருஷ்­ணன் உள்­ளிட்ட அக்­கட்­சி­க­ளின் நிர்­வா­கி­கள் பங்­கேற்­ற­னர்.

சென்னை சைதாப்­பேட்­டை­யில் நடந்த ஆர்­பாட்­டத்­தில் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி மாநி­லச் செய­லா­ளர் கே.பால­கி­ருஷ்­ணன் கலந்து­கொண்­டார்.

தென்­சென்னை மாவட்­டச் செய­லா­ளர் ஆர்.வேல்­மு­ரு­கன், மாநி­லக்­குழு உறுப்­பி­னர் ஏ.பாக்­கி­யம், செயற்­குழு உறுப்­பி­னர்­கள் க.பீம்­ராவ், ம.சித்­தி­ர­கலா, சைதாப்­பேட்டை பகு­திச் செய­லா­ளர் வெங்­க­டேஷ் உள்­ளிட்­டோர் பேசி­னர்.

ஆர்ப்­பாட்­டத்­தின்­போது கே.பால­கி­ருஷ்­ணன் செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்­துப் பேசி­னார்.

அப்­போது அவர், "பல­மொழி பேசும் நாட்­டில், இந்­தி­யைத் திணிக்­கும் வேலை­யை­செய்­கின்­ற­னர். நாடா­ளு­மன்ற, பொதுத்­துறை, அரசு நட­வ­டிக்­கை­கள் இனி இந்­தி­யில்­தான் இருக்­கும் என்ற நிலையை உரு­வாக்கி வரு­கின்­ற­னர். 43 விழுக்­காட்டு மக்­கள் இந்தி பேசு­வதால் இதை செய்­வ­தாக மத்­திய அரசு கூறு­கிறது.

இந்தி திணிப்பு, நுழை­வுத் தேர்வை எதிர்த்து முதல்­வர் அனைத்­துக் கட்சி கூட்­டத்தை கூட்டி மத்­திய அர­சுக்கு அழுத்­தம் தர வேண்­டும். இளை­ய­ராஜா சிறந்த இசை­ஞானி என்­ப­தில் மாற்­றுக்­கருத்து இல்லை. ஆனால், அம்­பேத்­க­ரு­டன் பிர­த­மர் நரேந்­திர மோடியை அவர் ஒப்­பீடு செய்­தது எந்­த­வி­தத்­தி­லும் பொருத்­த­மற்­றது. நேர்­மை­யற்­றது, நியா­ய­மற்­றது.

"இதில் ஏதோ ஓர் அர­சி­யல் உள்­நோக்­கம் இருக்­கிறது," என்று கே.பால­கி­ருஷ்­ணன் கூறி­னார்.

சென்னை அண்ணா சாலை­யில் மத்­திய சென்னை மாவட்­டச் செய­லா­ளர் ஜி.செல்வா தலை­மை­யில் நடந்த ஆர்ப்­பாட்­டத்­தில் அர­சி­யல் தலை­மைக்­குழு உறுப்­பி­னர் ஜி.ராம­கி­ருஷ்­ணன் கலந்­து­கொண்­டார்.

அவர் கூறும்­போது, "இந்தி பேசாத மாநி­லங்­களில் தொடர்பு மொழி­யாக ஆங்­கி­லம்­தான் இருக்க வேண்­டும். இந்­தியை ஏற்க முடி­யாது என்று 1968ஆம் ஆண்டு தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

"மத்­திய அர­சின் ஆட்­சி­மொழி சட்­ட­மும் இதை ஏற்­றுக் கொண்­டுள்­ளது. தமிழ், ஆங்­கி­லம் என இரு மொழிக் கொள்­கை­யைத்­தான் அனைத்­துக் கட்­சி­களும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளன. இந்­தித் திணிப்பை கைவிட வேண்­டும்," என்­றார்.