கூவாகத் தேரோட்டத்தின்போது வீட்டின் மேல்மாடம் இடிந்து விழுந்தது

கூவாகத் தேரோட்டத்தின்போது வீட்டின் மேல்மாடம் இடிந்து விழுந்தது

1 mins read
572ef4b1-1b9c-41df-9013-bab05afdd804
பழைய கட்டடம் ஒன்றின் மேல் மாடத்தில் இருந்து தோரோட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது மாடம் இடிந்து கீழே விழுந்தது. படம்: ஊடகம் -

உளுந்­தூர்­பேட்டை: கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டத்­தின் உளுந்­தூர்­பேட்டை அரு­கே­யுள்ள கூவா­கம் கிரா­மத்­தில் கூத்­தாண்­ட­வர் கோவி­லில் சித்­தி­ரைத் திரு­விழா கடந்த 5ஆம் தேதி சாகை வார்த்­தல் நிகழ்ச்­சி­யு­டன் தொடங்கி நடை­பெற்று வரு­கிறது. இத்­தி­ரு­வி­ழா­வில் திரு­நங்­கை­கள் ஏரா­ள­மா­னோர் கலந்து கொண்­ட­னர்.

விழா­வின் 16-வது நாள் நிகழ்ச்­சி­யாக நேற்று (புதன்­கி­ழமை) அதி­காலை கோவி­லில் உள்ள அர­வாண் சிர­சுக்கு முதல் மாலை அணி­விக்­கும் நிகழ்ச்சி நடை­பெற்­றது. அதன் பிறகு தேரோட்ட நிகழ்ச்­சி­யும் நடை­பெற்று வரு­கிறது.

இந்த நிலை­யில், கூவா­கம் தேர்த்­தி­ரு­வி­ழா­வின்­போது தேரோட்­டத்­தைக் காண அந்­தப் பகு­தி­யில் உள்ள ஒரு பழைய வீட்­டின் மேல்­மா­டத்­தில் ஏரா­ள­மா­னோர் ஏறி நின்று தேரோட்­டத்தை வேடிக்கை பார்த்­துக்­கொண்­டி­ருந்­த­னர். வீட்­டின் அருகே தேர் வந்­த­போது திடீ­ரென பால்­கனி இடிந்து விழுந்­தது.

இந்த விபத்­தில் பத்­துக்­கும் மேற்­பட்­டோர் காயம் அடைந்­த­னர். உடனே பாது­காப்­புப் பணி­யில் இருந்த காவல்­து­றை­யி­னர் காய­மடைந்­த­வர்­களை மீட்டு சிகிச்­சைக்­காக உளுந்­தூர்­பேட்டை அரசு மருத்­து­வக்­கல்­லூ­ரிக்கு அனுப்பி வைத்­த­னர். அங்கு அவர்­க­ளுக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

காவல்­துறை அதி­கா­ரி­க­ளின் எச்­ச­ரிக்­கை­யை­யும் மீறி ஏரா­ள­மா­னோர் அந்த மேல்­மா­டத்­தில் ஏறி நின்­ற­தால் பாரம் தாங்­கா­மல் அது இடிந்து விழுந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

நல்­ல­வே­ளை­யாக இந்த விபத்­தில் சிக்­கி­ய­வர்­கள் காயத்­து­டன் உயிர் தப்­பி­னர்.