கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை வலியுறுத்து

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை வலியுறுத்து

1 mins read
b65cbc21-6d17-4948-af1d-5b6aad1d27d8
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொவிட்-19 தொற்­றுக்­குச் சிகிச்சை பெறு­வோர் மருத்­து­வ­ம­னை­களில் இல்லை என்ற போதி­லும் மருந்­து­கள், மருத்­து­வச் சாத­னங்­கள் போன்­ற­வற்றை எப்­போ­தும் தயார்­நி­லை­யில் வைத்­தி­ருக்க வேண்­டும். தமி­ழ­கத்­தின் 38 மாவட்­டங்­களில் பெரும்­பா­லான மாவட்­டங்­களில் புதிய தொற்று இல்­லா­விட்­டா­லும் 8 மாவட்­டங்­களில் மீண்­டும் கொவிட்-19 தொற்று அதி­க­ரிக்­கும் அறி­கு­றி­கள் உள்­ளன என்று தமிழ் நாடு சுகா­தா­ரத்­துறை மாவட்ட ஆட்­சி­யர்­க­ளுக்கு எழு­திய கடி­தத்­தில் தெரி­வித்­துள்­ளது. புதிய வகை கொரோனா பர­வலைக் கட்­டுப்­ப­டுத்த தொடர்ந்து பரி­சோ­த­னை­களை மேற்­கொள்ள வேண்­டும். கிருமிப்பரவலைத் தடுப்­ப­தற்­காக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்­கொள்ள வேண்­டும் என்­றும் அந்­தத்­துறை வலி­யு­றுத்­தி­யது.

சிகிச்சை பெறுவோர் எண்­ணிக்கை குறை­வாக இருப்­ப­தால் தமி­ழ­கத்­தில் கொவிட்-19 தொடர்­பான கவலை வேண்­டி­ய­தில்லை என்று நிபு­ணர்­கள் கூறி­யுள்­ள­னர். என்­றா­லும் கவ­ன­மு­டன் இருக்க வேண்­டி­யது நமது கடமை. ஆகை­யால் பொது­மக்­களைக் கண்­காணித்து கிருமிப் பர­வலை கட்­டுப்­ப­டுத்த தடுப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்று சுகா­தா­ரத்­துறை அறி­வு­றுத்­தி­யுள்­ளது.