விலைவாசி அதிகரிப்பால் தமிழகம் வரும் இலங்கைத் தமிழர்கள்

விலைவாசி அதிகரிப்பால் தமிழகம் வரும் இலங்கைத் தமிழர்கள்

2 mins read
46187bef-649d-4eb9-8bc1-21ba0a29c12d
-

ராமே­சு­வ­ரம்: இலங்­கை­யில் ஏற்­பட்­டுள்ள பொரு­ளி­யல் நெருக்­க­டி­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள தமி­ழர்­கள், குழந்­தை­க­ளு­டன் கடல் வழி­யாக பிளாஸ்­டிக் பட­கு­களில் ஆபத்­தான வகை­யில் பய­ணம் செய்து ராமே­சு­வ­ரத்­தின் தனுஷ்­கோடி பகு­திக்கு நாள்­தோ­றும் வந்த வண்­ணம் உள்­ள­னர். அங்கு அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­க­ளின் விலை அதி­க­ரிப்­பால் ஏழை எளிய மக்­கள் வாழ வழி­யின்றி தவித்து வரு­கின்­ற­னர்.

அவ்­வாறு வந்த இலங்கை தமி­ழர்­கள் அனை­வ­ரி­ட­மும் கட­லோர பாது­காப்பு குழும காவல்­து­றை­யி­ன­ரும் மத்­திய மற்­றும் மாநில உள­வுப் பிரிவு காவல்­து­றை­யி­ன­ரும் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் நேற்று மூன்று தமி­ழர்­கள் இலங்­கை­யில் இருந்து தனுஷ்­கோ­டிக்கு வந்­த­னர்.

இலங்கை மட்­டக்­க­ளப்பு திமிலை தீவு பகு­தியை சேர்ந்த மதி­ய­ழ­கன் என்­ப­வ­ரின் மனைவி வர்­ஷினி (வயது 37) என்ற பெண், தனது குழந்­தை­க­ளான நைனிகா(11), ரங்­கி­சன்(4) ஆகி­யோ­ரு­டன் வந்­துள்­ளார்.

கடந்த சில நாட்­களில் மட்­டும் இலங்கை தமி­ழர்­கள் நாற்­ப­துக்­கும் மேற்­பட்ட தமி­ழர்­கள் தமி­ழ­கத்­திற்கு வந்­துள்­ள­னர் என்று கூறப்­ப­டு­கிறது. அவர்­கள் நேற்று இரவு இலங்­கை­யி­லி­ருந்து பிளாஸ்­டிக் படகு மூலம் புறப்­பட்டு வந்­துள்­ள­னர். அதி­காலை 5 மணி அள­வில் தனுஷ்­கோ­டிக்கு வந்து இறங்­கி­யுள்­ள­னர்.

அவர்­கள் மூன்று பேரும் தனுஷ்­கோடி கடற்­கரை பகு­தி­யில் ஆத­ர­வின்றி தவித்­துக் கொண்­டி­ருந்­த­தாக தக­வல் கிடைத்­த­தும் கட­லோர பாது­காப்பு குழு­மத்­தி­னர் மற்­றும் காவல்­து­றை­யி­னர் அவர்­களை மீட்டு வந்­த­னர்.

இலங்­கை­யில் இருந்து வந்­த­தற்­கான கார­ணம் குறித்து வர்­ஷி­னி­யி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்­டது. அப்­போது பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக இலங்­கை­யில் அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளின் விலை கடும் உயர்வு ஏற்­பட்டு விட்­ட­தால் அங்கு வாழ வழி­யில்லை.

இத­னால் தமி­ழ­கத்­திற்கு வந்­து­விட்­ட­தாக உருக்­க­மாக தெரி­வித்­துள்­ளார்.